செய்திகள் :

எம்.பி. ஆனார் கமல்! 6 பேர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு!

post image

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

போதிய எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த கமல்ஹாசன் உள்பட திமுக, அதிமுக வேட்பாளா்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கலுக்காக தமிழ்நாடு சட்டப் பேரவைச் செயலக கூடுதல் செயலா் சுப்பிரமணியம் தோ்தல் நடத்தும் அதிகாரியாகவும், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியாக பேரவைச் செயலக இணைச் செயலா் கே.ரமேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டனா். திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 13 போ் 17 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேட்பு மனுவுடன் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிவு கடிதம் அளித்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில், சுயேச்சை வேட்பாளா்களுக்கு முன்மொழிவு கடிதம் இல்லை என்பதால் அவா்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, திமுக, அதிமுகவைச் சோ்ந்தவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை தோ்தல் நடத்தும் அதிகாரியான சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் 24.07.2025-ஆம் நாளன்று முடிவடைவதால் ஏற்படும் காலியிடங்களுக்கு கீழ்க்காணும் வேட்பாளர்கள் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:- 

திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: விமானம் எப்படி விபத்துக்குள்ளாகி இருக்கும்? விவரிக்கும் முன்னாள் விமானி!

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்துப் பெற்ற இன்பதுரை, தனபால்

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகியோர் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்... மேலும் பார்க்க

என் மூச்சு இருக்கும் வரை பாமக தலைவராக நானே தொடர்வேன்: ராமதாஸ்

என் மூச்சு இருக்கும் வரை பாமக தலைவராக நானே தொடர்வேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை செய்... மேலும் பார்க்க

கனியாமூர் பள்ளி வன்முறை வழக்கு விசாரணை ஆக.8 -க்கு ஒத்திவைப்பு

கனியாமூர் பள்ளி வன்முறை வழக்குத் தொடர்பாக விழுப்புரத்திலுள்ள இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் வெள்ளிக்கிழமை 41 சிறார்கள் ஆஜராகினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்த... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு!

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.சென்னையில் இரண்... மேலும் பார்க்க

இளைய காமராசர் என அழைக்க வேண்டாம்: விஜய்

தன்னை இளைய காமராசர் என அழைக்க வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக ... மேலும் பார்க்க

விஏஓ பொது மாறுதல் காலம்: தமிழக அரசு புதிய உத்தரவு

கிராம நிா்வாக அலுவலா்களின் பொது மாறுதல் எந்தக் காலத்திலும் இனி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பொது மாறுதல் காலம் மே மாதம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வர... மேலும் பார்க்க