செய்திகள் :

விமான விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி!

post image

குஜராத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மீது ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், கடுமையாக சேதமடைந்த விடுதியில் இருந்த ஐந்து மருத்துவ மாணவர்கள் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதியில் தங்கியிருந்த சுமார் 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விமானம் விழுந்தபோது, கட்டடமும் தீப்பற்றி எரிந்ததாகவும், இதனால், அதில் இருந்த மருத்துவ மாணவர்களின் நிலை குறித்து கவலை ஏற்பட்ட நிலையில், முதற்கட்டமாக, விடுதியில் தங்கியிருந்த 5 மாணவர்கள் பலியானதாகக் கூறப்படுகிறது. அவர்களது அடையாளங்கள் தெரியவில்லை.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதி, மெகானி என்ற பகுதியில் இயங்கி வந்துள்ளது. இந்தக் கட்டடத்தின் மீதுதான், ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கட்டடத்தில் இருந்த சிலர் பலியானதாகவும், பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், 5 பேர் பலியாகிவிட்டதாகவும் மாணவர் விடுதியில் இருந்த 20 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், இன்று பகல் 1.44 மணிக்கு தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானத்தில் விமானிகள், ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்த நிலையில், இதுவரை 204 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் விவரங்கள வெளியாகியிருக்கிறது.

இதில், ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் 19 முதல் 20 வயதுடைய இளைஞர்களாக இருப்பதால் அவர்கள் பெரும்பாலும், மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியிருந்தவர்களாக இருப்பர் என்றும் கருதப்படுகிறது.

மருத்துவர்களின் விடுதி மீது விழுந்த விமானத்தால் விடுதி கட்டடத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது. விமானம் கட்டடத்தின் மீது விழுந்தபோது, மருத்துவர்கள் விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டது. அந்த கட்டடத்தில் மாணவர்களுக்கான உணவகம் இயங்கி வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கோவாவில் தொடரும் கனமழை! 3 நாள்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவா மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கடலோர மாநிலமான கோவாவின் பல்வேறு இ... மேலும் பார்க்க

கடந்தகால விமான விபத்துகளில் தப்பி வந்த அதிசயப் பிறவிகள்!

பொதுவாக விமான விபத்துகள் நேரிடும்போது, பலி எண்ணிக்கைக் கடுமையாக இருக்கக் காரணம், உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதே.உயரத்திலிருந்து விழுவது, எரிபொருளால் வெடித்துக் சிதறுவது, விபத்து என்றாலே பயங... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு உதவ முன்வந்த எல்ஐசி!

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கான எல்ஐசி காப்பீட்டுக் கோரிக்கைகளை சிக்கலின்றி எளிதாக முடித்துக் கொடுக்க எல்ஐசி முன்வந்துள்ளது.காப்பீடுகளுக்கான கோரிக்களை மிக எளிதாக, எவ்வித... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! நண்பரை இழந்து வாடும் பிரதமர் மோடி!

குஜராத் விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் பலியான நிலையில், பலியானோர்க்கு ப... மேலும் பார்க்க

தாய்லாந்தில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்! ஏன்?

தாய்லாந்திலிருந்து தில்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் புக்கெட் நகரத்திலிருந்து, ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர் பஸ் ஏ320 பயணிகள் விமானம் இன்று... மேலும் பார்க்க

விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி குடும்பத்தினரைச் சந்தித்த பிரதமர் மோடி

அகமதாபாத்தில் விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரைச் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை வெள்ள... மேலும் பார்க்க