செய்திகள் :

1990 - 2025: இந்தியாவில் நேரிட்ட முக்கிய விமான விபத்துகள்!

post image

குஜராத்தின் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து போயிங் 787-8 ரக ஏர் இந்தியா விமானம், லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்ற சில மணித் துளிகளிலேயே விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், பெரும்பாலானோர் உயிர்ப் பிழைத்திருக்கும் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.மேலும், விமானம் மோதிய கட்டடத்தின் சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் 1990 முதல் இன்றுவரையில் நிகழ்ந்த சில முக்கிய விமான விபத்துகள் பற்றி..

பிப்ரவரி 1990 - ஏர் லைன்ஸ்

பிப்ரவரி 14, 1990 ஆம் ஆண்டில், பெங்களூரில் இருந்து மும்பைக்கு செல்லவிருந்த ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் விடி-இபிஎன் தரையில் இருந்து 2300 அடி உயரத்துக்கு சென்ற நிலையில், கீழே விழுந்து விபத்தானது. 2 விமானிகள், 5 விமான ஊழியர்கள், 4 கைக்குழந்தைகள் உள்பட 146 பேர் பயணித்த இந்த விமானம் விபத்துக்குள்ளானதில், 92 பேர் பலியாகினர்.

மே 1990 - ஏர் இந்தியா

மே 7, 1990 ஆம் ஆண்டில், லண்டலின் இருந்து தில்லி வழியாக மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியாவின் போயிங் 747 விடீ-இபிஓ விமானம், தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, இடது இறக்கை தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இருப்பினும், அதிருஷ்டவசமாக விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 1991 - இந்தியன் ஏர்லைன்ஸ்

ஆகஸ்ட் 16, 1991 ஆம் ஆண்டில், கல்கத்தாவில் இருந்து இம்பால் (மணிப்பூர்) சென்ற இந்தியன் ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விடீ-இஎஃஃப்எல் விமானம், இம்பால் விமான நிலையத்தில் இருந்து 30.04 கி.மீ. தொலைவில் வெடித்துச் சிதறியது. விமானம் முற்றிலும் வெடித்துச் சிதறியதில், விமானத்தில் இருந்த 69 பேரும் பலியாகினர்.

ஜனவரி 1992 - ஏர் லங்கா

ஜனவரி 10, 1992 ஆம் ஆண்டில், கொலோம்போவில் (இலங்கை) இருந்து சென்னைக்கு வரவிருந்த ஏர் லங்கா நிறுவனத்தி பி-737 விமானம், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் சமயத்தில், தரையிறக்கும் கியர் செயல்படாததால், சக்கரங்கள் ஓடுதளத்தில் உராய்ந்து விபத்தானது. இருப்பினும், நல்வாய்ப்பாக விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

செப்டம்பர் 1992 - இந்தியன் ஏர்லைன்ஸ்

செப்டம்பர் 4, 1992 ஆம் ஆண்டில், உதய்ப்பூரில் (ராஜஸ்தான்) இருந்து மும்பை செல்லவிருந்த விமானம், ஏற்றத்தின்போது விமான ஓடுதளத்தில் இருந்த விமான ஊழியரை மோதிவிட்டுச் சென்றது. இருப்பினும், விமான ஊழியர் காயமடைந்ததாகவும், விமானத்துக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறினர்.

ஜனவரி 1993 - இந்தியன் ஏர்லைன்ஸ்

ஜனவரி 9, 1993 ஆம் ஆண்டில், உஸ்பெகிஸ்தான் விமான நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்ட ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் டியூ-154 விமானம், ஹைதராபாதில் இருந்து தில்லிக்கு 165 பேருடன் சென்ற நிலையில், தில்லி விமான நிலையத்தின் ஓடுதளத்தில் உராய்ந்து, அதன் வழியே இருந்த தளவாடங்கள் மீதும் மோதியது. இருப்பினும், விமானத்தில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, விமானம் வெடித்துச் சிதறியது.

ஏப்ரல் 1993 - இந்தியன் ஏர்லைன்ஸ்

ஏப்ரல் 26, 1993 ஆம் ஆண்டில், தில்லியில் இருந்து ஔரங்காபாத் வழியாக மும்பைக்கு 118 பேருடன் செல்லவிருந்த இந்தியன் ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம், ஔரங்காபாத் விமான நிலையத்தில் இருந்து ஏற்றத்தின்போது, விமான நிலையப் பணியில் இருந்த லாரியுடன் விபத்தைத் தடுக்கும் சமயத்தில், மேலிருந்த அதிமின்னழுத்த கம்பிகளில் உராய்ந்து, தரையில் மோதியது. இருப்பினும், 55 பேருக்கு காயங்களுடன் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நவம்பர் 1993 - இந்தியன் ஏர் லைன்ஸ்

நவம்பர் 15, 1993 ஆம் ஆண்டில், சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த இந்தியன் ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் விடீ-இடிவி விமானத்துக்கு உரிய தகவல்கள் கிடைக்காததால், ஹைதராபாதில் தரையிறங்க சிரமப்பட்டது. தகவல்களைப் பெறுவதில் தொடர்ந்து சிரமம் ஏற்பட்டதால், சென்னைக்கே செல்ல திட்டமிடப்பட்டது. இருப்பினும், சென்னை செல்ல போதிய எரிவாயு இல்லாத காரணத்தினால், திருப்பதி விமான நிலையத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், திருப்பதியிலும் உரிய தகவல்களைப் பெற சிரமம் ஏற்பட்டமையால், திருப்பதி விமான நிலையத்தில் இருந்து 25.9 கி.மீ. தொலைவில் இருந்த திறந்தவெளி நிலத்தில் தரையிறக்கப்பட்டது. மேலும், விமானத்தில் இருந்த 262 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

டிசம்பர் 1994 - இந்தியன் ஏர்லைன்ஸ்

டிசம்பர் 17, 1994 ஆம் ஆண்டில், சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு இந்தியன் ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் விடீ-இபிஎம் விமானம் செல்லவிருந்த நிலையில், விமான ஓடுதளத்தில் குறுக்கே இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்றபோது, அவர் மீது விமானம் மோதி, அவரது உடலை இழுத்துச் சென்று, விமான ஓடுதளம் முழுவதும் சிதறடித்தது.

ஜூலை 1995 - ஈஸ்ட் வெஸ்ட்

ஜூலை 1, 1995 ஆம் ஆண்டில், பயிற்சிப் பணியில் இருந்த ஈஸ்ட் வெஸ்ட் எஃப்-27 விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட விபத்தில், விமானத்தில் இருந்த பயிற்சியாளரும் பயிற்றுநரும் உயிர்த் தப்பினர்.

டிசம்பர் 1995 - இந்தியன் ஏர்லைன்ஸ்

டிசம்பர் 2, 1995 ஆம் ஆண்டில், ஜெய்ப்பூரில் இருந்து தில்லி சென்ற இந்தியன் ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் விடி-இசிஎஸ் விமானம், தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தை நிறுத்த முடியாமல், ஓடுதளத்தைத் தாண்டி நின்றது. இருப்பினும், விமானத்தில் பயணித்த 102 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மே 1996 - அர்ச்சனா ஏர்வேஸ்

மே 18, 1996 ஆம் ஆண்டில், தில்லியில் இருந்து கான்பூர் (உ.பி.) செல்லவிருந்த அர்ச்சனா ஏர்வேஸ் நிறுவனத்தின் விடி-இடிபி விமானம், ஓடுதளத்தின் சுற்றுச்சுவரில் மோதி விபத்தானது. இருப்பினும், இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.

ஜூலை 1996 - அர்ச்சனா ஏர்வேஸ்

ஜூலை 11, 1996 ஆம் ஆண்டில், தில்லியில் இருந்து சிம்லா வழியாக பூண்டூர் (இமாசல்) செல்லவிருந்த அர்ச்சனா நிறுவனத்தின் விடி-இடிசி விமானம், சிம்லாவில் இருந்து ஏற்றத்தின்போது, கந்தா கிராமத்தின் (உத்தரகாண்ட்) அருகே மலை மீது விபத்தானது. இருப்பினும், விமானத்தில் இருந்த 9 பேரும் காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நவம்பர் 1996 - சௌதி அரேபியன் போயிங்

நவம்பர் 12, 1996 ஆம் ஆண்டில், தில்லியில் இருந்து தெஹ்ரானுக்கு 312 பேரை ஏற்றிச் சென்ற சௌதி அரேபியன் போயிங் விமானமும், 37 பேரை ஏற்றிச் சென்ற கஜகஸ்தானில் இருந்து தில்லிக்கு அழைத்து வந்த விமானமும் வான்வெளியில் மோதி விபத்தானது. இந்த விபத்தில் 2 விமானங்களிலும் பயணித்த 349 பேரும் பலியாகினர்.

ஜூலை 1998 - இந்தியன் ஏர்லைன்ஸ்

ஜூலை 30, 1998 ஆம் ஆண்டில், கொச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்லவிருந்த இந்தியன் ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் விடி-இஜேடபிள்யூ விமானம், விமான நிலையத்தில் இருந்த கட்டடத்தின் மேற்பகுதியில் மீது மோதியது. இருப்பினும், விமானத்தில் பயணித்த அனைவரும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

ஜூலை 2000 - இந்தியன் ஏர்லைன்ஸ்

ஜூலை 17, 2000 ஆம் ஆண்டில், பாட்னாவில் இருந்து லக்னௌ செல்லவிருந்த இந்தியன் ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் விடீ-இஜிடி விமானம், கொல்கத்தாவில் இருந்து ஏற்றத்தின்போது, விமான நிலையத்துடனான தகவல் தொடர்பில் ஏற்பட்ட கோளாறால், பாட்னா விமான நிலையம் அருகே மரத்தின் மீது விபத்தானது.

ஏப்ரல் 2004 - ஜக்கூர்

ஏப்ரல் 17, 2004 ஆம் ஆண்டில், அக்னி ஏரோஸ்போர்ட்ஸ் அட்வென்சர்ஸ் அகாதெமியின் விமானம், ஜக்கூர் விமான நிலையத்தில் இருந்து நாடிர்கலுக்கு செல்லவிருந்த நிலையில், நிலத்தில் மோதி விபத்தானது. இந்த விபத்தில்தான், நடிகை சௌந்தர்யாவும் பலியானார்.

மார்ச் 2006 - ஏர் டெக்கான்

மார்ச் 11, 2006 ஆம் ஆண்டில், கோவையில் இருந்து பெங்களூருக்கு 44 பேருடன் சென்ற ஏர் டெக்கானின் புது விமானமான ஏடிஆர்-72, தொழில்நுட்பாக கோளாறால் நிலத்தில் மோதி, முன்பகுதி சேதமடைந்து விபத்தானது.

அக்டோபர் 2008, கிங் ஏர்

அக்டோபர் 29, 2008 ஆம் ஆண்டில், சண்டிகரில் இருந்து லூதியானா சென்ற கிங் ஏர் நிறுவனத்தின் சி-90 விமானத்தில் ஏற்பட்ட தகவல் தொடர்பு பிரச்னையால், நிலத்தில் மோதி விபத்தானது. இந்த விமானம் எரிந்ததில் விமானிகள் இருவரும் பலியாகினர்.

மே 2010 - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மே 22, 2010 ஆம் ஆண்டில், துபையில் இருந்து மங்களூருக்கு 166 பேருடன் வந்து கொண்டிருந்த ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் IX-812 விமானம், வனப்பகுதி அருகே தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 158 பேர் பலியாகினர்.

ஜூலை 2016

ஜூலை 22, 2016 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-32 விமானம், வங்காள விரிகுடாவில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 29 பேர் பலியாகினர்.

ஜூன் 2019

ஜூன் 3, 2019 ஆம் ஆண்டில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-32 விமானம், தகவல் தொடர்பை இழந்ததால், அருணாசலப் பிரதேசத்தில் மலைப்பாங்கான பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் பலியாகினர்.

ஆகஸ்ட் 2020 - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

ஆகஸ்ட் 7, 2020 ஆம் ஆண்டில், துபையில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு 190 பேருடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் IX-1344 விமானம், தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தாக்கில் விழுந்து இரு துண்டுகளாக பிரிந்தது. பலத்த மழை மற்றும் புலப்பாடு காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த விபத்தில், 21 பேர் பலியாகினர்.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாதில் வியாழக்கிழமையில் (ஜூன் 12) ஏர் இந்தியா விமானம் AI171 கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கோவாவில் தொடரும் கனமழை! 3 நாள்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவா மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கடலோர மாநிலமான கோவாவின் பல்வேறு இ... மேலும் பார்க்க

கடந்தகால விமான விபத்துகளில் தப்பி வந்த அதிசயப் பிறவிகள்!

பொதுவாக விமான விபத்துகள் நேரிடும்போது, பலி எண்ணிக்கைக் கடுமையாக இருக்கக் காரணம், உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதே.உயரத்திலிருந்து விழுவது, எரிபொருளால் வெடித்துக் சிதறுவது, விபத்து என்றாலே பயங... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு உதவ முன்வந்த எல்ஐசி!

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கான எல்ஐசி காப்பீட்டுக் கோரிக்கைகளை சிக்கலின்றி எளிதாக முடித்துக் கொடுக்க எல்ஐசி முன்வந்துள்ளது.காப்பீடுகளுக்கான கோரிக்களை மிக எளிதாக, எவ்வித... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! நண்பரை இழந்து வாடும் பிரதமர் மோடி!

குஜராத் விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் பலியான நிலையில், பலியானோர்க்கு ப... மேலும் பார்க்க

தாய்லாந்தில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்! ஏன்?

தாய்லாந்திலிருந்து தில்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் புக்கெட் நகரத்திலிருந்து, ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர் பஸ் ஏ320 பயணிகள் விமானம் இன்று... மேலும் பார்க்க

விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி குடும்பத்தினரைச் சந்தித்த பிரதமர் மோடி

அகமதாபாத்தில் விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரைச் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை வெள்ள... மேலும் பார்க்க