செய்திகள் :

கர்நாடகா: 'அலைச்சல் இல்லை; வரிசையில் நிற்க வேண்டாம்' - கவனம் பெறும் இல்லம் தேடி மருத்துவம் திட்டம்!

post image

அடித்தட்டு மக்களுக்கும் மருத்துவம் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது இல்லத்திலேயே சிகிச்சை அளிக்கும் விதமாக இலவச வெளிநோயாளர் பிரிவு (OPD) சேவைகளைத் தொடங்கவிருக்கிறது கர்நாடகா சுகாதாரத் துறை.

Ambulance

முதன்முறையாக சி.வி. ராமன் நகர் பொது மருத்துவமனையில் இருந்து தொடங்கப்படுகிறது இந்தத் திட்டம். முதற்கட்டமாக புற்றுநோய் நோயாளிகள், முதியவர்கள், மூளை ரத்தக்கசிவு மற்றும் இதய பிரச்னைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருப்பவர்களுக்கு இந்த வகையில் சிகிச்சை அளிக்கப்படவிருக்கிறது.

இதுபோன்ற தீவிர பிரச்னைகளால் அவதிப்படும் எளிய மக்கள் மருத்துவ வசதிகளை அணுகுவது சவாலானதாக இருக்கும் என்பதை உணர்ந்து, OPD சேவைகளை வீட்டிலேயே வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.

Minister for Health and Family Welfare, Shri Dinesh Gundu Rao
Minister for Health and Family Welfare, Shri Dinesh Gundu Rao

இதனால் கடுமையான நோயுடன் பல கிலோமீட்டர்கள் பயணிக்கவோ, வரிசையில் நிற்கவோ தேவையில்லை. ஒரு மொபைல் மருத்துவமனை மாதிரியின் மூலம் மருத்துவர்கள் வீடுதேடி வந்து தொடர் பராமரிப்பு மற்றும் அவசர சிகிச்சைகளை வழங்குவார்கள்.

முதல்படியாக சி.வி. ராமன் நகரைச் சுற்றிய 5 இடங்களில் இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. அடுத்தடுத்த மாதங்களில் இந்த இடங்கள் விரிவாக்கம் செய்யப்படும். என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட உடனேயே இந்த திட்டத்தை பெங்களூரு மூழுவதும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கர்நாடக சுகாதாரத்துறை இந்த புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாக புகழப்படுகின்றனர்.

ஈரோடு: "பயிர்களுக்கு இடையே முளைக்கும் களைதான் அதிமுக" - ஸ்டாலின் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே வேளாண்மை-உழவர் நலத் துறை சார்பில் இரண்டு நாள் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு புதன்கிழமை தொடங்கியது.இதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசுகையில், "தி.மு.க. ... மேலும் பார்க்க

தாமலேரிமுத்தூர்: `விபத்து' அபாயத்தைச் சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் கூட்ரோடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 179A, ஆம்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகளால் பரவலாக பயன்படு... மேலும் பார்க்க

Rain Alert: இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

இன்று (11-06-2025) வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்... மேலும் பார்க்க

"திமுக ஆட்சி விளம்பரத்திற்கு மட்டுமே; பள்ளிக்கல்வித்துறை சீரழிந்து வருகிறது" - நயினார் விமர்சனம்

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு மறுத்து வருவதை திமுக அமைச்சர்களும், முதல்வர் ஸ்டாலினும் தொடர்ந்து கண்டித்து வருகின்றனர். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு வழங்கப்பட வ... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி: டெலிவரி பாய்கள், டாக்ஸி ஓட்டுநர்களுக்கு ஓய்வு அறை; என்னென்ன வசதிகள் உள்ளன?

சாலைகளில் அங்குமிங்கும் இருசக்கர வாகனங்களில் பறந்து உழைத்துக் கொண்டிருக்கும் ஆன்லைன் டெலிவரி வேலை செய்பவர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளிட்ட இணையத் தொழிலாளர்களுக்கு ஓய்வெடுப்பதும், குறிப்பாக பெண் இணையத்... மேலும் பார்க்க