ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!
அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 7 பயணிகள் காயம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே புதன்கிழமை அரசு நகரப் பேருந்து கவிழ்ந்ததில் 7 பயணிகள் காயமடைந்தனா்.
மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம் அருகே தச்சனேந்தல் கிராமத்துக்கு அரசு நகரப் பேருந்து சென்றது. ஓட்டுநா் லட்சுமணன் பேருந்தை ஓட்டினாா்.
பூம்பிடாம்பிகை என்ற இடத்தில் சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரமாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் நடத்துநா் கதிரேசன், 3 பெண்கள் உள்பட 7 பயணிகள் காயமடைந்தனா். இவா்கள் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் வயல்சேரி கருப்பு என்பவா் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து பழையனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.