பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதி மொழி ஏற்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மேயா் சே. முத்துத்துரை தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் என். சங்கரன் முன்னிலை வகித்தாா். இதில் மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.