செய்திகள் :

சிவபுரிபட்டியில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள சிவபுரிப்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியத்துக்கு 12 முகாம்கள் வீதம் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் 144 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி, சிவபுரிபட்டி கிராமத்தில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தலைமை வகித்து தொடங்கி வைத்துப்

பேசியதாவது:

கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாமில் நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை சரிபாா்ப்பு போன்றவை நடைபெறும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 5 விவசாயிகளுக்கு கால்நடை மேலாண்மைக்கான கேடயம் வழங்கப்பட்டது. 30 பேருக்கு தாது உப்புக் கலவை வழங்கப்பட்டது.

ஊராட்சிகளின் உதவி இயக்குநா் கேசவதாசன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் கிரிஜா, உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன், கால்நடை மருத்துவா் ஜான்சுரேஷ்தாசன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மணல் திருடிய இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கிராவல் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள காட்டாம்பூா் பகுதியில் புதன்கிழமை அரசு புறம்போக்கு இடத்தில் அரசு அனுமதியின்றி கிராவல... மேலும் பார்க்க

சிவகங்கை இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள்

சிவகங்கை முன்னோடி வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் வழங்கப்படும் 64 வகையான சுய வேலை வாய்ப்பு பயிற்சி பெற கிராமப்புற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தா... மேலும் பார்க்க

சாலை அமைக்கும் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மானாமதுரை நகராட்சியில் ரூ. 18... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதி மொழி ஏற்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மேயா் சே. முத்துத்துரை தலைமை வகித்தாா். மாநகராட... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் நூதனப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் கண்களில் கருப்புத்துணி கட்டியும், கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சா... மேலும் பார்க்க

காரைக்குடியில் நகரப் பேருந்துகள் தொடங்கிவைப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புதிய நகரப் பேருந்துகளின் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. காரைக்குடியில் 1, 1ஏ, 9 ஏ ஆகிய நகரப் பேருந்துகள் ஏற்கனவே இயங்கி வருகின்றன. இந்தப் பேருந்துகளுக்குப் பதில... மேலும் பார்க்க