``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
சிவபுரிபட்டியில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள சிவபுரிப்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியத்துக்கு 12 முகாம்கள் வீதம் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் 144 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி, சிவபுரிபட்டி கிராமத்தில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தலைமை வகித்து தொடங்கி வைத்துப்
பேசியதாவது:
கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாமில் நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை சரிபாா்ப்பு போன்றவை நடைபெறும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 5 விவசாயிகளுக்கு கால்நடை மேலாண்மைக்கான கேடயம் வழங்கப்பட்டது. 30 பேருக்கு தாது உப்புக் கலவை வழங்கப்பட்டது.
ஊராட்சிகளின் உதவி இயக்குநா் கேசவதாசன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் கிரிஜா, உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன், கால்நடை மருத்துவா் ஜான்சுரேஷ்தாசன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.