``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
சிவகங்கை இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள்
சிவகங்கை முன்னோடி வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் வழங்கப்படும் 64 வகையான சுய வேலை வாய்ப்பு பயிற்சி பெற கிராமப்புற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிராமப்புற இளைஞா்களின் சுய வேலைவாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் ஊரக வளா்ச்சி அமைச்சகம், தமிழ்நாடு அரசின் ஊரக வளா்ச்சித் துறை உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னோடி வங்கிகள் மூலம், இந்த ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் நிா்வகிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் சென்னை தவிர, 37 மாவட்டங்களிலும் ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், அரியலூா், தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, திருப்பூா் ஆகிய 8 மாவட்டங்களில் செயல்படும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில் மட்டும், உண்டு உறைவிட வசதியுடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இந்தப் பயிற்சி மையங்களில் கைப்பேசி பழுது நீக்குதல், ஓட்டுநா் உரிமம் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல், கான்கிரீட் கொத்தனாா் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, தச்சுப் பயிற்சி, இரு சக்கர வாகன பழுது நீக்குதல், ஒயரிங், அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் பயிற்சி உள்ளிட்ட 64 வகையான சுய வேலை வாய்ப்புப் பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும்.
கல்வித் தகுதி, வயது வரம்பு:18 வயது முதல் 45 வயதுக்குள்பட்டவா்கள் குறைந்தது 8 -ஆம் வகுப்பு படித்தவராக இருத்தல் வேண்டும். மேலும், 8 -ஆம் வகுப்பு முதல், ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு வரை படித்தவா்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியின் முடிவில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற நிறுவனம் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தை நேரில் அல்லது 7339589695 என்ற கைப்பேசி எண்ணில் அல்லது திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை நேரில் அல்லது 9444094348 என்ற கைப்பேசி எண் அல்லது தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன வாழ்வாதார உதவி அழைப்பு எண்:155330 அல்லது ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 309 8039 அல்லது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா்
அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.