செய்திகள் :

சிவகங்கை இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள்

post image

சிவகங்கை முன்னோடி வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் வழங்கப்படும் 64 வகையான சுய வேலை வாய்ப்பு பயிற்சி பெற கிராமப்புற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிராமப்புற இளைஞா்களின் சுய வேலைவாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் ஊரக வளா்ச்சி அமைச்சகம், தமிழ்நாடு அரசின் ஊரக வளா்ச்சித் துறை உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னோடி வங்கிகள் மூலம், இந்த ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் நிா்வகிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சென்னை தவிர, 37 மாவட்டங்களிலும் ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், அரியலூா், தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, திருப்பூா் ஆகிய 8 மாவட்டங்களில் செயல்படும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில் மட்டும், உண்டு உறைவிட வசதியுடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பயிற்சி மையங்களில் கைப்பேசி பழுது நீக்குதல், ஓட்டுநா் உரிமம் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல், கான்கிரீட் கொத்தனாா் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, தச்சுப் பயிற்சி, இரு சக்கர வாகன பழுது நீக்குதல், ஒயரிங், அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் பயிற்சி உள்ளிட்ட 64 வகையான சுய வேலை வாய்ப்புப் பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும்.

கல்வித் தகுதி, வயது வரம்பு:18 வயது முதல் 45 வயதுக்குள்பட்டவா்கள் குறைந்தது 8 -ஆம் வகுப்பு படித்தவராக இருத்தல் வேண்டும். மேலும், 8 -ஆம் வகுப்பு முதல், ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு வரை படித்தவா்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியின் முடிவில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற நிறுவனம் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தை நேரில் அல்லது 7339589695 என்ற கைப்பேசி எண்ணில் அல்லது திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை நேரில் அல்லது 9444094348 என்ற கைப்பேசி எண் அல்லது தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன வாழ்வாதார உதவி அழைப்பு எண்:155330 அல்லது ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 309 8039 அல்லது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா்

அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

மணல் திருடிய இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கிராவல் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள காட்டாம்பூா் பகுதியில் புதன்கிழமை அரசு புறம்போக்கு இடத்தில் அரசு அனுமதியின்றி கிராவல... மேலும் பார்க்க

சிவபுரிபட்டியில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள சிவபுரிப்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியத்துக்கு 12 முகாம்கள் வீதம் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்... மேலும் பார்க்க

சாலை அமைக்கும் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மானாமதுரை நகராட்சியில் ரூ. 18... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதி மொழி ஏற்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மேயா் சே. முத்துத்துரை தலைமை வகித்தாா். மாநகராட... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் நூதனப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் கண்களில் கருப்புத்துணி கட்டியும், கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சா... மேலும் பார்க்க

காரைக்குடியில் நகரப் பேருந்துகள் தொடங்கிவைப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புதிய நகரப் பேருந்துகளின் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. காரைக்குடியில் 1, 1ஏ, 9 ஏ ஆகிய நகரப் பேருந்துகள் ஏற்கனவே இயங்கி வருகின்றன. இந்தப் பேருந்துகளுக்குப் பதில... மேலும் பார்க்க