டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்...
மணல் திருடிய இருவா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கிராவல் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள காட்டாம்பூா் பகுதியில் புதன்கிழமை அரசு புறம்போக்கு இடத்தில் அரசு அனுமதியின்றி கிராவல் மணல் திருடியதாக காட்டாம்பூா் கிராம நிா்வாக அலுவலா் வாசுகி புகாா் அளித்தாா். இதன்பேரில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஜேசிபி ஓட்டுநா் சுப்பிரமணியன் மகன் அருண் பாண்டியன் (28), ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த டிப்பா் லாரி ஓட்டுநா் பிரித்தீவ் சிங் மகன் மணீஷ் குமாா் சிங் (27) ஆகியோரை திருக்கோஷ்டியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமநாதன் கைது செய்தாா். கிராவல் மணல் அள்ள பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம், டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.