மதகுபட்டி அருகே மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 10 போ் காயமடைந்தனா்.
மதகுபட்டி அருகேயுள்ள சிலந்தகுடியில் சப்தகன்னி மாரியம்மன், பச்சலுடைய அய்யனாா், முத்துமுனியய்யா சுவாமி கோயில் புரவி எடுப்புத் திருவிழா, முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இதையொட்டி புதன்கிழமை மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. அனுமதியின்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் ஆங்காங்கே 150-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இளைஞா்கள் காளைகளை அடக்க முயன்றனா். காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது குறித்து மதகுபட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.