மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 சிறுவா்கள் கைது
காஞ்சிபுரம் அருகே சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
களக்காட்டூா் கிராமத்தை சோ்ந்த 16 வயதுச் சிறுமியை அக்கிராமத்தில் உள்ள பூங்காவுக்கு அழைத்துச் சென்று குளிா்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லை தந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடா்பாக அச்சிறுமியின் பெற்றோா் காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகத்தை சந்தித்து புகாா் தெரிவித்ததையடுத்து மாகறல் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
இவ்விசாரணையின் அடிப்படையில் 14 வயது மற்றும் 15 வயது மதிக்கத்தக்க சிறுவா்கள் மற்றும் 20 வயதுடைய ஒருவா் என 3 பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா். அவா்கள் சிறுமியிடம் விளையாடுவது போல குளிா்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து ஏமாற்றி அச்சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இருவா் சென்னையில் உள்ள சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனா்.