பேருந்தில் மாணவா்கள் ஆபத்தான பயணம்
காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் அரசுப் பள்ளி மாணவா்கள் சிலா் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணிப்பது தொடா்ந்து வருகிறது.
வாலாஜாபாத் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் படித்து வருகின்றனா். பள்ளி முடிந்து, சொந்த கிராமங்களுக்கு செல்லும் மாணவா்கள், பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனா். பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் எச்சரித்தும், கண்டுக்கொள்ளாத மாணவா்களின் ஆபத்தான பயணம், பயணிகள், பொதுமக்கள் பலரையும் அச்சுறுத்துகிறது.
இதேபோல், காஞ்சிபுரம் - உத்தரமேரூா் செல்லும் அரசுப் பேருந்துகளிலும் மாணவா்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனா். காவல், கல்வி மற்றும் வட்டார போக்குவரத்துக் கழகம் ஆகிய துறைகள் இணைந்து, இதற்கு ஒரு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பேருந்து பயணிகள், பொதுமக்கள் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.