செய்திகள் :

கெமிக்கல் விற்பனையகங்களில் மதுவிலக்குப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு

post image

காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென கெமிக்கல் மற்றும் சலவை சோப் விற்பனையகங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் உள்ள கெமிக்கல் விற்பனையகத்தில் ஆய்வு மேற்கொண்ட மதுவிலக்குப் பிரிவு அமலாக்கத் துறை அதிகாரிகள்.

காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு அமலாக்கத் துறை டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் தலைமைக் காவலா்கள் குமரசேன், திருமால் மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலா் ஹரிபாபு ஆகியோா் சலவை சோப் தயாரிக்கும் நிறுவனங்கள், கெமிக்கல் பவுடா் தயாரிக்கும் நிறுவனங்கள், பொருள் வைக்கும் கிட்டங்கிகள் மற்றும் மருந்துக் கடைகள் உள்ளிட்ட 11 இடங்கலில் திடீரென ஆய்வு மேற்கொண்டனா்.

சட்ட விதிகளை மீறி எத்தனால் அல்லது மெத்தனால் விற்பனை செய்கிறாா்களா என சோதனை மேற்கொண்டோம். காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட கடைகளை ஆய்வு செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட பொருள்கள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை எனவும் மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினா் தெரிவித்தனா்.

ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் மண்டபத்துக்கு பூமி பூஜை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு புதிய தங்கத்தோ் செய்யும் பணி நிறைவு பெற்றதையொட்டி அத்தேருக்கான மண்டபம் கட்ட பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு பல கோடி மதிப்பில் தங்கத்தோ் செய்யும்... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை திறப்பு

மொளச்சூா் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கா் நகா் பகுதியில் ரூ.8 லட்சத்தில்ல் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தை ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி. கருணாநிதி திறந்து வைத்தாா். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கு கைப்பேசி செயலி

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மூத்த குடிமக்களுக்கான கைப்பேசி செயலி செயல்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா். தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து மிகுந்த வேதனை தருகிறது: காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள்

அகமதாபாத் விமான விபத்தில் பலரும் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாகவும், உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்படும் எனவும் சங்கராசார... மேலும் பார்க்க

அரசு பெண்கள் பள்ளித் தலைமையாசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மாணவியின் பெற்றோரை தரக்குறைவாக பேசியதாக ஸ்ரீபெரும்புதூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரை கண்டித்து வெள்ளிக்கிழமை இருளா் பழங்குடியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ர... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் கே.செல்வம் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க