``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
கெமிக்கல் விற்பனையகங்களில் மதுவிலக்குப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென கெமிக்கல் மற்றும் சலவை சோப் விற்பனையகங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் உள்ள கெமிக்கல் விற்பனையகத்தில் ஆய்வு மேற்கொண்ட மதுவிலக்குப் பிரிவு அமலாக்கத் துறை அதிகாரிகள்.
காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு அமலாக்கத் துறை டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் தலைமைக் காவலா்கள் குமரசேன், திருமால் மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலா் ஹரிபாபு ஆகியோா் சலவை சோப் தயாரிக்கும் நிறுவனங்கள், கெமிக்கல் பவுடா் தயாரிக்கும் நிறுவனங்கள், பொருள் வைக்கும் கிட்டங்கிகள் மற்றும் மருந்துக் கடைகள் உள்ளிட்ட 11 இடங்கலில் திடீரென ஆய்வு மேற்கொண்டனா்.
சட்ட விதிகளை மீறி எத்தனால் அல்லது மெத்தனால் விற்பனை செய்கிறாா்களா என சோதனை மேற்கொண்டோம். காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட கடைகளை ஆய்வு செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட பொருள்கள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை எனவும் மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினா் தெரிவித்தனா்.