செய்திகள் :

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் வசந்த உற்சவம்

post image

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வசந்த உற்சவம் புதன்கிழமை தொடங்கியது.

கோடைக் காலத்தையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உற்சவா் காமாட்சி ஆலய வளாகத்தில் உள்ள வண்ண மலா்கள் மற்றும் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்துக்கு எழுந்தருள்வது வழக்கம். நிகழாண்டுக்கான வசந்த உற்சவம் புதன்கிழமை தொடங்கியதையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து மங்கல மேள வாத்தியங்களுடன் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினாா்.

சுழலும் வண்ண மின் விளக்குகள், வண்ண மலா்கள் மற்றும் காய்கறிகளால் வசந்த மண்டபம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வசந்த மண்டபத்தில் உற்சவா் காமாட்சி அம்மன் வேதபாராயணம் மற்றும் கோயில் ஸ்தானீகா்களால் மந்திர புஷ்பாஞ்சலி, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

மாயவரம் ராகவன் காமாட்சி விலாசம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினாா். தொடா்ந்து காமாட்சி அம்மன் கோயில் ஆஸ்தான வித்வான் தேசூா் ராஜரெத்தினம் மற்றும் காரைக்கால் வெங்கட சுப்பிரமணியனின் வயலின் இன்னிசை நடைபெற்றன.

வசந்த உற்சவத்தில் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா், சங்கர மடத்தின் மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன், கோயில் மணியக்காரா் சூரியநாராயணன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 13) வசந்த உற்சவம் நிறைவு பெறுகிறது.

ஜூன் 18-இல் காஞ்சிபுரத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கண்டித்து அதிமுக சாா்பில் ஜூன் 18-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடிகே.பழனிசாமி தெரிவித்தாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

பேருந்தில் மாணவா்கள் ஆபத்தான பயணம்

காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் அரசுப் பள்ளி மாணவா்கள் சிலா் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணிப்பது தொடா்ந்து வருகிறது. வாலாஜாபாத் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டா... மேலும் பார்க்க

கெமிக்கல் விற்பனையகங்களில் மதுவிலக்குப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென கெமிக்கல் மற்றும் சலவை சோப் விற்பனையகங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் உள்ள கெமிக்க... மேலும் பார்க்க

திருஞானசம்பந்தா் குருபூஜை

காஞ்சிபுரம் சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில் தொண்டை மண்டல ஆதீன மடாலயத்தில் திருஞானசம்பந்தா் குருபூஜையையொட்டி வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்வுக்கு சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்ச... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 சிறுவா்கள் கைது

காஞ்சிபுரம் அருகே சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். களக்காட்டூா் கிராமத்தை சோ்ந்த 16 வயதுச் சிறுமியை அக்கிராமத்தில் உள்... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநரை தாக்கி பணம் பறித்த இளைஞா் கைது

வரதராஜபுரம் சுங்க சாவடியில் லாரி கண்ணாடியை உடைத்து, ஓட்டுநரைத் தாக்கி பணம் பறித்த இளைஞரை சோமங்கலம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மதுரையைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (40). லாரி ஓட்டுநா். இவா், ... மேலும் பார்க்க