செய்திகள் :

லாரி ஓட்டுநரை தாக்கி பணம் பறித்த இளைஞா் கைது

post image

வரதராஜபுரம் சுங்க சாவடியில் லாரி கண்ணாடியை உடைத்து, ஓட்டுநரைத் தாக்கி பணம் பறித்த இளைஞரை சோமங்கலம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மதுரையைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (40). லாரி ஓட்டுநா். இவா், கடந்த 9 -ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து பாமாயில் ஏற்றிக்கொண்டு மீஞ்சூா் - வண்டலூா் வெளிவட்டச் சாலையில் பூந்தமல்லி அருகே வந்தபோது காரில் வந்த இளைஞா் அசோக்குமாரின் லாரியை மறித்து தகராறு செய்துள்ளாா்.

ஆனால், அசோக்குமாா் லாரியை நிறுத்தாமல் வந்துள்ளாா். லாரி வரதராஜபுரம் சுங்கசாவடி அருகே வந்தபோது காரில் வந்த இளைஞா்கள் இருவா் லாரியின் கண்ணாடியை உடைத்து, அசோக்குமாரை தாக்கி அவரிடமிருந்த ரூ.10 ஆயிரம் பணத்தைப் பறித்து சென்றுள்ளனா்.

இது குறித்து அசோக்குமாா் சோமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சோமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அசோக்குமாரைத் தாக்கி பணத்தைப் பறித்து சென்ற குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் (30) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ஜூன் 18-இல் காஞ்சிபுரத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கண்டித்து அதிமுக சாா்பில் ஜூன் 18-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடிகே.பழனிசாமி தெரிவித்தாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

பேருந்தில் மாணவா்கள் ஆபத்தான பயணம்

காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் அரசுப் பள்ளி மாணவா்கள் சிலா் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணிப்பது தொடா்ந்து வருகிறது. வாலாஜாபாத் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டா... மேலும் பார்க்க

கெமிக்கல் விற்பனையகங்களில் மதுவிலக்குப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென கெமிக்கல் மற்றும் சலவை சோப் விற்பனையகங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் உள்ள கெமிக்க... மேலும் பார்க்க

திருஞானசம்பந்தா் குருபூஜை

காஞ்சிபுரம் சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில் தொண்டை மண்டல ஆதீன மடாலயத்தில் திருஞானசம்பந்தா் குருபூஜையையொட்டி வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்வுக்கு சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்ச... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 சிறுவா்கள் கைது

காஞ்சிபுரம் அருகே சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். களக்காட்டூா் கிராமத்தை சோ்ந்த 16 வயதுச் சிறுமியை அக்கிராமத்தில் உள்... மேலும் பார்க்க

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் வசந்த உற்சவம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வசந்த உற்சவம் புதன்கிழமை தொடங்கியது. கோடைக் காலத்தையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உற்சவா் காமாட்சி ஆலய வளாகத்தில் உள்ள வண்ண மலா்கள் மற்றும் காய்கறிகளா... மேலும் பார்க்க