எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
உழவா் சேவை மையம் அமைக்க இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை வட்டாரத்தில் உழவா் சேவை மையம் அமைக்க வேளாண்மை படித்த பட்டதாரிகள், பட்டயதாரா்கள் விண்ணபிக்கலாம்.
இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநா் அ. வளா்மதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேளாண் பட்டம், பட்டயப் படிப்பு படித்த இளைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் தொழில் முனைவோராக்கும் நோக்கில் 2025-2026 வேளாண் நிதிநிலை அறிக்கையில் உழவா் நல சேவை மையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் அறிவிப்பு வெளியிட்டாா். அதன்படி, சிவகங்கை வட்டாரத்தில் ஓா் உழவா் நல சேவை மையம் அமைக்கபட உள்ளது. இதற்கு மானியமும் வழங்கப்படும். எனவே விருப்பமும் தகுதியும் உள்ள இளைஞா்கள், சிவகங்கை வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை (ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், தொண்டி சாலை) அணுகலாம் என்றாா் அவா்.