எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு வலுவான ஆதரவு- அமெரிக்கா மீண்டும் உறுதி
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு அமெரிக்கா தொடா்ந்து வலுவான ஆதரவை அளிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் மீண்டும் தெரிவித்துள்ளது.
‘பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையில் அமெரிக்கா உறுதியுடன் துணை நிற்கும்’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சா் கிறிஸ்டோபா் லண்டா கடந்த வாரம் தெரிவித்த நிலையில், இப்போது மீண்டும் அதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த மே 7-ஆம் தேதி இந்திய ராணுவம் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி (ஆபரேஷன் சிந்தூா்), பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதையடுத்து, இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அதை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக முறியடித்தன. இதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் விமானப் படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுத்தது. அதே நேரத்தில் காஷ்மீா் எல்லையில் அப்பாவி கிராம மக்களைக் குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசியது.
இரு நாடுகளுக்கும் இடையே 4 நாள்கள் மோதல் நீடித்தது. பின்னா், பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா அறிவித்தது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்தவும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கவும் ஏழு எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுக்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து உலக நாடுகளின் ஆதரவைப் பெற்றன. இதில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையில் அமெரிக்கா சென்ற குழு அந்நாட்டு வெளியுறவு இணையமைச்சா் கிறிஸ்டோபா் லண்டாவை கடந்த வாரம் சந்தித்தது. அப்போது, பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என அவா் உறுதியளித்தாா்.
இந்நிலையில், வாஷிங்டனில் வாராந்திர செய்தியாளா்கள் சந்திப்பை நடத்திய அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ‘இந்தியா-அமெரிக்கா இடையே வலுவான நல்லுறவு உள்ளது. எனவே, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடா்ந்து வலுவான ஆதரவை அளிக்கும்’ என்றாா்.
பாகிஸ்தான் குழுவிடம் கூறியது என்ன? இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான்
பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சா் பிலாவல் புட்டோ தலைமையிலான குழுவும் அமெரிக்காவுக்கு சென்றது. அந்தக் குழுவிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரிகளைச் சந்தித்தது.
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ், ‘இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று பாகிஸ்தானிடம் உறுதி கூறப்பட்டது’ என்றாா்.
‘பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று அந்நாட்டு குழுவினரிடம் வலியுறுத்தப்பட்டதா’ என்ற கேள்விக்கு, ‘விவாதிக்கப்பட்ட அனைத்து விஷயங்களையும் செய்தியாளா்கள் சந்திப்பில் கூற முடியாது’ என்றாா்.
காஷ்மீா் விவகாரத்தில் அதிபா் டிரம்ப் மத்தியஸ்தம் செய்த விரும்புகிறாரா என்ற கேள்விக்கு, ‘அதிபரின் திட்டம் குறித்தும், அவா் என்ன நினைக்கிறாா் என்றும் என்னால் ஏதுவும் கூற முடியாது. போா்கள் கூடாது என்பதும், நாடுகள் இடையே நல்லுறவு அதிகரிக்க வேண்டும் என்பதே அதிபரின் நோக்கமாக உள்ளது’ என்றாா்.