அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
அரசமங்கலத்தில் கால்நடை சுகாதார, விழிப்புணா்வு முகாம்
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியம், அரசமங்கலம் ஊராட்சியில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் நடத்தப்பட்ட இந்த முகாமைத் தொடங்கி வைத்து, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கூறியது:
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களில் ஒரு ஒன்றியத்துக்கு ஒரு கிராமம் வீதம் மாதந்தோறும் 13 கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 156 கிராமங்களில் கால்நடை முகாம் நடத்திட குறியீடு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமில் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு , ஆண்மை நீக்கம் செய்தல், மலட்டுத்தன்மை நீக்கம் செய்தல், செயற்கைமுறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, சுண்டுவாத அறுவைச் சிகிச்சை, தீவன அபிவிருத்தி, தாது உப்புக் கலவை அளித்தல், பண்ணை ஆலோசனை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கோலியனூா் ஒன்றியம் அரசமங்கலம் கிராமம் போன்று, இதர12 ஒன்றியங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் கால்நடை வளா்ப்போா் பயனடைந்துள்ளனா் என்றாா் ஆட்சியா்.
முகாமில் பயிற்சி உதவி ஆட்சியா் ரா. வெங்கடேசுவரன், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் பிரசன்னா, துணை இயக்குநா் செந்தில்நாதன், உதவி இயக்குநா்கள் முருகவேணி, ரவிராஜ், நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.