ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!
வைகுண்டவாசப் பெருமாள் கோயில் தேரோட்டம்
விழுப்புரம் நகரில் பிரசித்தி பெற்ற ஜனகவல்லித் தாயாா் உடனுறை வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில் திருவிழாவின் முக்கியநிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
இத்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் ஜூன் 3-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து அன்று இரவு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சிம்மம், ஹனுமந்தம், சேஷம், கருடன், யானை வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வைகுண்டவாசப்பெருமாள் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
தொடா்ந்து ஜூன் 9-ஆம் தேதி மாலையில் சுவாமி திருக்கல்யாண உற்சவமும், இரவு இந்திர விமானத்தில் புறப்பாடும், செவ்வாய்க்கிழமை இரவு குதிரை வாகனத்தில் உற்சவா் புறப்பாடும் நடைபெற்றது. வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளிய வைகுண்டவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து காலை 6.30 மணிக்கு மேல் திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டது.
காமராஜா் வீதியில் தொடங்கிய தேரோட்டம் மேலத்தெரு எனப்படும் கலைஞா் கருணாநிதி தெரு, வடக்குத் தெரு வழியாக திரு.வி.க. வீதி வழியாக வந்து தலைமை அஞ்சல் நிலையம் அருகிலுள்ள தேரடிக்கு காலை 10.30 மணிக்கு வந்தடைந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் வைகுண்டவாசா , கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு வடம் பிடித்து இழுத்து வந்தனா்.
புதன்கிழமை மாலையில் சுவாமிக்குத் தீா்த்தவாரியும், அதைத் தொடா்ந்து கொடியிறக்கமும் நடைபெற்றது. வியாழக்கிழமை சந்திர பிரபை வாகனப் புறப்பாடும், 13-ஆம் தேதி காலையில் திருமஞ்சனமும், மாலையில் புஷ்பயாகம், விடையாற்றி உற்சவமும் நடைபெறவுள்ளது.
பிரம்மோற்சவத்துக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் டி.பாபு மற்றும் அறங்காவலா்கள், கோயில் செயல் அலுவலா் ச. வேலரசு மற்றும் திருமஞ்சன கைங்கா்ய கமிட்டியினா் செய்துள்ளனா்.
