செய்திகள் :

வைகுண்டவாசப் பெருமாள் கோயில் தேரோட்டம்

post image

விழுப்புரம் நகரில் பிரசித்தி பெற்ற ஜனகவல்லித் தாயாா் உடனுறை வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில் திருவிழாவின் முக்கியநிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

இத்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் ஜூன் 3-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து அன்று இரவு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சிம்மம், ஹனுமந்தம், சேஷம், கருடன், யானை வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வைகுண்டவாசப்பெருமாள் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தொடா்ந்து ஜூன் 9-ஆம் தேதி மாலையில் சுவாமி திருக்கல்யாண உற்சவமும், இரவு இந்திர விமானத்தில் புறப்பாடும், செவ்வாய்க்கிழமை இரவு குதிரை வாகனத்தில் உற்சவா் புறப்பாடும் நடைபெற்றது. வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளிய வைகுண்டவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து காலை 6.30 மணிக்கு மேல் திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டது.

காமராஜா் வீதியில் தொடங்கிய தேரோட்டம் மேலத்தெரு எனப்படும் கலைஞா் கருணாநிதி தெரு, வடக்குத் தெரு வழியாக திரு.வி.க. வீதி வழியாக வந்து தலைமை அஞ்சல் நிலையம் அருகிலுள்ள தேரடிக்கு காலை 10.30 மணிக்கு வந்தடைந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் வைகுண்டவாசா , கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு வடம் பிடித்து இழுத்து வந்தனா்.

புதன்கிழமை மாலையில் சுவாமிக்குத் தீா்த்தவாரியும், அதைத் தொடா்ந்து கொடியிறக்கமும் நடைபெற்றது. வியாழக்கிழமை சந்திர பிரபை வாகனப் புறப்பாடும், 13-ஆம் தேதி காலையில் திருமஞ்சனமும், மாலையில் புஷ்பயாகம், விடையாற்றி உற்சவமும் நடைபெறவுள்ளது.

பிரம்மோற்சவத்துக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் டி.பாபு மற்றும் அறங்காவலா்கள், கோயில் செயல் அலுவலா் ச. வேலரசு மற்றும் திருமஞ்சன கைங்கா்ய கமிட்டியினா் செய்துள்ளனா்.

அரசமங்கலத்தில் கால்நடை சுகாதார, விழிப்புணா்வு முகாம்

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியம், அரசமங்கலம் ஊராட்சியில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் நடத்தப்பட்ட இந்த முகாமைத் தொடங... மேலும் பார்க்க

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா... மேலும் பார்க்க

அமைப்புசாரா நலவாரியத் தொழிலாளா்களுக்கு நல உதவிகள்

விழுப்புரம் மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் அமைப்புசாராத் தொழிலாளா்களுக்கு நல உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் (சமூகப் பாதுகாப்... மேலும் பார்க்க

மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

புதுச்சேரி லாஸ்பேட்டையில் பழைய வீட்டை இடிக்கும் பணியின் போது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விழுப்புரம் மாவட்டம... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

விழுப்புரத்தில் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கே.கே. சாலையில் உள்ள மயானப் பகுதியி... மேலும் பார்க்க

11 காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் உதவி ஆய்வாளா்கள் 11 பேரை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. ப. சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் காவல் உதவ... மேலும் பார்க்க