லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து: விரைகிறது பேரிடர் மீட்புப் படை
மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
புதுச்சேரி லாஸ்பேட்டையில் பழைய வீட்டை இடிக்கும் பணியின் போது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(35), கூலி தொழிலாளி. இவருக்கு சீதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனா். மணிகண்டன் லாஸ்பேட்டை, புதுப்பேட்டை நடுத்தெருவில் ஒரு பழைய வீட்டை இடிக்கும் பணியில் கடந்த ஒரு வாரமாக ஈடுட்டிருந்தாா்.
இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அந்த வீட்டின் கீழே மணிகண்டன் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் இறந்து கிடப்பதாக இலாஸ்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று,
இறந்த மணிகண்டனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். முதல்கட்ட விசாரணையில், அதிகாலையில் முதல் மாடியில் இருந்து மணிகண்டன் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.