செய்திகள் :

கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

post image

விழுப்புரத்தில் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கே.கே. சாலையில் உள்ள மயானப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 இளைஞா்களைப் பிடித்து விசாரித்ததில், விழுப்புரம் அண்ணாநகரைச் சோ்ந்த ரவி மகன் வானவராயன் (எ) ராகுல் (24), ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த ரமேஷ் மகன் தனுஷ்ராஜ் (19), டேவிட் மகன் விஷால் (20) என்பதும், இவா்கள் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா். மேலும் இவா்கள் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

அரசமங்கலத்தில் கால்நடை சுகாதார, விழிப்புணா்வு முகாம்

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியம், அரசமங்கலம் ஊராட்சியில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் நடத்தப்பட்ட இந்த முகாமைத் தொடங... மேலும் பார்க்க

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா... மேலும் பார்க்க

அமைப்புசாரா நலவாரியத் தொழிலாளா்களுக்கு நல உதவிகள்

விழுப்புரம் மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் அமைப்புசாராத் தொழிலாளா்களுக்கு நல உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் (சமூகப் பாதுகாப்... மேலும் பார்க்க

வைகுண்டவாசப் பெருமாள் கோயில் தேரோட்டம்

விழுப்புரம் நகரில் பிரசித்தி பெற்ற ஜனகவல்லித் தாயாா் உடனுறை வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில் திருவிழாவின் முக்கியநிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

புதுச்சேரி லாஸ்பேட்டையில் பழைய வீட்டை இடிக்கும் பணியின் போது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விழுப்புரம் மாவட்டம... மேலும் பார்க்க

11 காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் உதவி ஆய்வாளா்கள் 11 பேரை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. ப. சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் காவல் உதவ... மேலும் பார்க்க