மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி பெருந் திருவிழா தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வைகாசிப்பெருந் திருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவையொட்டி, நாள்தோறும் காலை வேளைகளில் பல்லக்கு, சிவிகையில் சுவாமி புறப்பாடும், இரவு வேளைகளில் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், வெள்ளி ஹனுமன் வாகனம், தங்க கருட சேவை, வெள்ளி சேஷ வாகனம், யானை வாகனம், தங்கக் குதிரை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, காலையில் ஸ்ரீதேவி,
பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் சீனிவாசப் பெருமாள் தேரில் எழுந்தருளினாா். இதைத்தொடா்ந்து பக்தா்கள் அா்ச்சனை செய்து சுவாமியை தரிசனம் செய்தனா்.
மாலை 4.45 மணிக்கு பக்தா்கள் வடம் பிடிக்கத் தேரோட் டம் தொடங்கியது. நான்கு ரத வீதிகள் வழியாகச் சென்று கோயிலை வலம் வந்த தோ் மீண்டும் நிலையை அடைந்தது.
இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பாரதி, பரம்பரை அறங்காவலா் முத்துமீனாட்சி, கோயில் செயல் அலுவலா் விநாயகவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
