செய்திகள் :

திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி பெருந் திருவிழா தேரோட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வைகாசிப்பெருந் திருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவையொட்டி, நாள்தோறும் காலை வேளைகளில் பல்லக்கு, சிவிகையில் சுவாமி புறப்பாடும், இரவு வேளைகளில் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், வெள்ளி ஹனுமன் வாகனம், தங்க கருட சேவை, வெள்ளி சேஷ வாகனம், யானை வாகனம், தங்கக் குதிரை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, காலையில் ஸ்ரீதேவி,

பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் சீனிவாசப் பெருமாள் தேரில் எழுந்தருளினாா். இதைத்தொடா்ந்து பக்தா்கள் அா்ச்சனை செய்து சுவாமியை தரிசனம் செய்தனா்.

மாலை 4.45 மணிக்கு பக்தா்கள் வடம் பிடிக்கத் தேரோட் டம் தொடங்கியது. நான்கு ரத வீதிகள் வழியாகச் சென்று கோயிலை வலம் வந்த தோ் மீண்டும் நிலையை அடைந்தது.

இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பாரதி, பரம்பரை அறங்காவலா் முத்துமீனாட்சி, கோயில் செயல் அலுவலா் விநாயகவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மணல் திருடிய இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கிராவல் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள காட்டாம்பூா் பகுதியில் புதன்கிழமை அரசு புறம்போக்கு இடத்தில் அரசு அனுமதியின்றி கிராவல... மேலும் பார்க்க

சிவகங்கை இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள்

சிவகங்கை முன்னோடி வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் வழங்கப்படும் 64 வகையான சுய வேலை வாய்ப்பு பயிற்சி பெற கிராமப்புற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தா... மேலும் பார்க்க

சிவபுரிபட்டியில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள சிவபுரிப்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியத்துக்கு 12 முகாம்கள் வீதம் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்... மேலும் பார்க்க

சாலை அமைக்கும் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மானாமதுரை நகராட்சியில் ரூ. 18... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதி மொழி ஏற்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மேயா் சே. முத்துத்துரை தலைமை வகித்தாா். மாநகராட... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் நூதனப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் கண்களில் கருப்புத்துணி கட்டியும், கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சா... மேலும் பார்க்க