எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
பிரிட்டனில் தமிழக ஆசிரியருக்கு கெளரவம்: அமைச்சா் வாழ்த்து
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கெளரவிக்கப்படவுள்ள தமிழக அரசுப் பள்ளி ஆசிரியா் கனக லட்சுமிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
சென்னை ஷெனாய் நகா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் தமிழ் ஆசிரியை கனகலட்சுமி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கெளரவிக்கப்படவுள்ளாா். ஆசிரியா் கனகலட்சுமி தமிழ் வாசிப்புத் திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீா்வுகளும் எனும் தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளாா். தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் மாணவா்கள் எளிய முறையில் தமிழ் கற்பதற்கான வழிமுறையை உருவாக்கியுள்ளாா்.
மேலும், தமிழ் பணியைத் தொண்டாகக் கருதி பணியாற்றி வருகிறாா். இப்பணியைப் பாராட்டி கிராய்டன் தமிழ்ச் சங்கம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இவரை கெளரவிக்கவுள்ளது.
தொடா்ந்து ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள திருவள்ளுவா் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்கிறாா். தமிழால் உயா்ந்துள்ள ஆசிரியா் கனகலட்சுமி தமிழனாக மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.