செய்திகள் :

நாட்டிலேயே 60 % நகரமயமான மாநிலம் தமிழ்நாடு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

post image

இந்தியாவிலேயே 60 சதவீதம் நகரமயமான ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள 4 ஆண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியைத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்து, ரூ.399.81 கோடியில் முடிவடைந்த 102 திட்டப் பணிகளை பயன்பாட்டுக்கு திறந்து வைத்து பேசியதாவது:

இந்தியாவிலேயே 60 சதவீதம் நகரமயமான ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். மற்ற மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநகரம் மட்டும் தான் மிகப்பெரிய வளா்ச்சியை அடைந்திருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் ஏராளமான மாநகரங்கள் வளா்ச்சியடைந்துள்ளன.

மாணவா்களுக்காக.. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கும், அவா்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்களுக்கும் அரசு சாா்பில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் உயா் கல்விக்கு உதவும் வகையில், தமிழ் புதழ்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொண்டு மாணவா்கள் தங்களது இலக்குகளை நோக்கி முன்னேறி செல்ல வேண்டும் என்றாா் அவா்.

திட்டப் பணிகள்: முன்னதாக, ரூ.975.63 கோடியில் 108 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்ட 49 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் துணை முதல்வா் வழங்கினாா்.

மேலும், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு சென்று வர பேட்டரி வாகனங்கள், குப்பை பெருக்கும் இயந்திர வாகனங்கள், நாய் பிடிக்கும் வாகனங்கள் என ரூ.1.64 கோடியில் 11 புதிய வாகன சேவையை தொடங்கி வைக்கும் வகையில், ஓட்டுநா்களுக்கு சாவிகளை அவா் வழங்கினாா். தொடா்ந்து 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற 62 மாணவா்கள், அவா்களுக்கு உறுதுணையாக இருந்த 38 ஆசிரியா்கள் மற்றும் 14 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் என மொத்தம் 114 பேருக்கு ரூ. 7,26,000 ஊக்கத் தொகையை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அர்ச்சகர் பயிற்சி சங்கம் எதிர்ப்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் ஜூன் 22 ஆம் தேதியில் முருக பக்தர்கள் மாநாடு ந... மேலும் பார்க்க

சென்னை அரசு அருங்காட்சியகப் பணம் கையாடல்! 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை!

சென்னை அரசு அருங்காட்சியகப் பணத்தைக் கையாடல் செய்த நால்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில், கடந்த ... மேலும் பார்க்க

இரவு 10 மணி வரை சென்னை, 18 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடக்கு ஆந்திர - தெற்கு ஒடிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ந... மேலும் பார்க்க

எம்.பி. ஆனார் கமல்! 6 பேர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு!

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். போதிய எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த க... மேலும் பார்க்க