சூறைக் காற்றில் சாய்ந்த கைப்பேசி கோபுரம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் புதன்கிழமை வீசிய சூறைக் காற்றில் தனியாா் கைப்பேசி கோபுரம் சரிந்து விழுந்தது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேருந்து நிலையம் எதிரே தனியாா் விடுதி மாடியில் 50 அடி உயரத்தில் தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றில் இந்தக் கோபுரம் அடியோடு சாய்ந்து அருகேயுள்ள பள்ளிவாசல் வணிகவளாகத்தில் விழுந்தது. நல்வாய்ப்பாக பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பில்லை. இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.