செய்திகள் :

தாமலேரிமுத்தூர்: `விபத்து' அபாயத்தைச் சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் கூட்ரோடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 179A, ஆம்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகளால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் திசை மாறி செல்லும் இடத்தில் எந்த பாதுகாப்பு முன்னெடுப்புகளும்  இல்லாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் இப்பகுதியில் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசியபோது, “நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் அதிவேகத்தில் வருகின்றன. சென்னை நோக்கி செல்லும் வாகனங்களும், திருப்பத்தூர் மற்றும் நாட்டறம்பள்ளி நோக்கி செல்லும் வாகனங்களும் ஒரே நேரத்தில் முந்த முயல்வதால், இங்கு விபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. சிறிது தொலைவிற்கு முன்னரே வேகத்தைக் குறைத்து வர வேண்டும். ஆனால் ஒரு சிலர் எதையும் பொருட்படுத்தாமல் வருவதால் வாரத்திற்கு ஒரு விபத்தாவது இங்கு நடந்தேறுகிறது‌.

இதனால் மாணவர்களும் பொதுமக்களும் சாலையைக் கடக்க திக்கு முக்காடுகின்றோம். எனவே விபத்துகளைத் தடுத்து வாகனங்கள் பாதுகாப்புடன் செல்ல அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இந்த விவகாரம் தொடர்பாக விகடன் தளத்தில் ஸ்பாட் விசிட் அடித்து தாமலேரிமுத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்; பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை கோரும் மக்கள்! என்ற‌ தலைப்பில் செய்தி ஒன்றினை மே22-ம் தேதி வெளியிட்டிருந்தோம். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு போயிருந்தோம். விகடனில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, (03/06/2025) அன்று அதிகாரிகள் விபத்து சூழலைக் கருத்தில் கொண்டு விரைந்து நான்கு பேரிகார்டுகள் அமைத்து, விபத்து அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். 

ஒடுகத்தூர்: 5 வருடங்களாகியும் பயன்பாட்டுக்கு வராத பேருந்து நிலைய நிழற்கூடம்; நடவடிக்கை எடுப்பார்களா?

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சியில் 70,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஒடுகத்தூர் பேரூராட்சி பகுதியானது மேல் அரசம்பட்டு, பீஞ்சமந்தை போன்ற மலை கிராமங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது. எனவ... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: "காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் உதவி செய்யுங்கள்"- ராகுல் காந்தி வேண்டுகோள்

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AI 171 என்ற எண் கொண்ட போயிங் 787 ரக விமானத்தில், விமான குழுவினரோடு சேர்த்து மொத்தமாக 242 பேர் பயணித்திருக்கிறார்கள். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலி... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: "இதயம் நொறுங்கி விட்டது..." - பிரதமர் மோடி வருத்தம்

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AI 171 என்ற எண் கொண்ட போயிங் 787 ரக விமானத்தில், விமான குழுவினரோடு சேர்த்து மொத்தமாக 242 பேர் பயணித்திருக்கிறார்கள். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலி... மேலும் பார்க்க

`2026ல் கூட்டணி ஆட்சி அல்ல; அது பாஜகவின் ஆட்சி...' - பாஜக அண்ணாமலையின் கூட்டணிக் கணக்கு!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்துக் இப்போதே அரசியல் கட்சிகள் கூட்டணிக் கணக்குகளை வகுக்க ஆரம்பித்துவிட்டன. அரசியல் களத்தில் இப்போதைக்குக் கூட்டணி குறித்த விவாதங்கள்தான் சூடுபிடிக்க ஆரம... மேலும் பார்க்க

பட்டா மாறுதலுக்கு லஞ்சமா? - அலைக்கழிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி உயிரிழந்த சோகம்.. நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (90). இவருக்கு 3 மகன், 2 மகள். ஒரு மகன் இறந்துவிட்டார். இந்நிலையில், மூதாட்டிக்குச் சொந்தமாக 110 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், ... மேலும் பார்க்க

ஈரோடு: "பயிர்களுக்கு இடையே முளைக்கும் களைதான் அதிமுக" - ஸ்டாலின் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே வேளாண்மை-உழவர் நலத் துறை சார்பில் இரண்டு நாள் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு புதன்கிழமை தொடங்கியது.இதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசுகையில், "தி.மு.க. ... மேலும் பார்க்க