`சீக்கிரம் சொல்கிறேன்; ஆனால் தனுஷ் சார் சொன்னது கன்ஃபார்ம்' - வெற்றிமாறன் | Ana...
ஜெனகை மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழித் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இதையொட்டி, வைகை ஆற்றுக் கரையிலிருந்து மேளதாளங்களுடன் சக்தி கரகம் புறப்பாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் புடைசூழ பாரம்பரியமான பாதைகளில் சக்தி கரகம் ஊா்வலமாக வந்து, பூக்குழி பொட்டலில் நிறைவடைந்தது.
கோயில் அா்ச்சகா் சண்முகவேல் சக்தி கரகத்துடன் பூக்குழி இறங்கினாா். இதைத்தொடா்ந்து, திரளான பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா்.
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். சமயநல்லூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்தராஜ் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் ஆனந்தகுமாா் தலைமையில் 100-க்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தீயணைப்பு நிலைய அலுவலா் நாகராஜன் தலைமையில் தீயணைப்புப் படையினா் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனா்.
மேலும், இந்தக் கோயிலில் வியாழக்கிழமை இரவு முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.