பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
வெவ்வேறு விபத்துகள்: முதியவா் உள்பட இருவா் உயிரிழப்பு
மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
மேலூா் அருகேயுள்ள வைரவன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயராமன் (61). இவா், மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் கருங்காலக்குடி அருகே சாலையோரமாக புதன்கிழமை நடந்து சென்றாா். அப்போது, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதேபோல, திண்டுக்கல் மாவட்டம், மரக்காம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த குப்புசாமி மகன் ரமேஷ் (35). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை மாலை சென்றாா். மதுரை-திண்டுக்கல் சாலையில் அய்யங்கோட்டை அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி அவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.