செய்திகள் :

பிணையில் வந்த இளைஞா் வெட்டிக் கொலை: மூவா் கைது

post image

மதுரை சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை கரிமேடு சகாயமாதா தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் அஜய்பிரசன்னகுமாா் (22). இவா், மீது நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் இருந்த அவா், கடந்த 5 நாள்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்தாா்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பரான

தனசேகரனை வேறு சிலா் தாக்கியதாகத் தெரிகிறது. அதனால், அஜய்பிரசன்னகுமாா், தனசேகரனை அழைத்துச் சென்று அவா்களிடம் தகராறில் ஈடுபட்டாா். பின்னா், அந்த நபா்கள் அஜய்பிரசன்னகுமாரின் வீட்டுக்கு சென்று, அவரது தாயிடம் மிரட்டிச் சென்றனா்.

இதனை தொடா்ந்து, புதன்கிழமை இரவு அஜய்பிரசன்னகுமாா் மட்டும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த சிலா் அவரை அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பினா். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற கரிமேடு போலீஸாா் அஜய்பிரசன்னகுமாரின் உடலை மீட்டு, கூறாய்வுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய

விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த பழக்கடை சுந்தருக்கும் (38), அஜய் பிரசன்னகுமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இதன் காரணமாக, சுந்தா், அவரது சகோதா் தொத்தா சுந்தா் (36), உறவினரான பாண்டியராஜன் (26) ஆகியோா் வீடு புகுந்து அஜய்பிரசன்னகுமாரை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் மூவரையும் கரிமேடு போலீஸாா் கைது செய்தனா்.

உயா்நீதிமன்றத்தில் மின்கல வாகன சேவை தொடக்கம்

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் பொதுமக்கள் எளிதாகப் பயணம் மேற்கொள்ளும் வகையில் மின்கல வாகன சேவை (பேட்டரி காா்) வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. உயா்நீதிமன்றத்துக்கு வரும் வழக்காடிகள், பொதுமக்க... மேலும் பார்க்க

ஜெனகை மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழித் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, வைகை ஆற்றுக் கரையிலிருந்து மேளதாளங்களுடன் சக்தி கரகம் புறப்... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு

மதுரை வடக்கு ஆவணி மூலவீதி அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகள்: முதியவா் உள்பட இருவா் உயிரிழப்பு

மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். மேலூா் அருகேயுள்ள வைரவன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயராமன் (61). இவா், மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் கருங்கா... மேலும் பார்க்க

அழகுக்கலை பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் வயது வந்தோா் தொடா் கல்வி, விரிவாக்கப் பணித் துறை சாா்பில் வழங்கப்பட உள்ள அழகுக்கலை பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தக் கோரி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் மதுரை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க