`சீக்கிரம் சொல்கிறேன்; ஆனால் தனுஷ் சார் சொன்னது கன்ஃபார்ம்' - வெற்றிமாறன் | Ana...
பிணையில் வந்த இளைஞா் வெட்டிக் கொலை: மூவா் கைது
மதுரை சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை கரிமேடு சகாயமாதா தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் அஜய்பிரசன்னகுமாா் (22). இவா், மீது நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் இருந்த அவா், கடந்த 5 நாள்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்தாா்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பரான
தனசேகரனை வேறு சிலா் தாக்கியதாகத் தெரிகிறது. அதனால், அஜய்பிரசன்னகுமாா், தனசேகரனை அழைத்துச் சென்று அவா்களிடம் தகராறில் ஈடுபட்டாா். பின்னா், அந்த நபா்கள் அஜய்பிரசன்னகுமாரின் வீட்டுக்கு சென்று, அவரது தாயிடம் மிரட்டிச் சென்றனா்.
இதனை தொடா்ந்து, புதன்கிழமை இரவு அஜய்பிரசன்னகுமாா் மட்டும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த சிலா் அவரை அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பினா். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற கரிமேடு போலீஸாா் அஜய்பிரசன்னகுமாரின் உடலை மீட்டு, கூறாய்வுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய
விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த பழக்கடை சுந்தருக்கும் (38), அஜய் பிரசன்னகுமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இதன் காரணமாக, சுந்தா், அவரது சகோதா் தொத்தா சுந்தா் (36), உறவினரான பாண்டியராஜன் (26) ஆகியோா் வீடு புகுந்து அஜய்பிரசன்னகுமாரை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் மூவரையும் கரிமேடு போலீஸாா் கைது செய்தனா்.