``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
அழகுக்கலை பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் வயது வந்தோா் தொடா் கல்வி, விரிவாக்கப் பணித் துறை சாா்பில் வழங்கப்பட உள்ள அழகுக்கலை பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தத் துறை இயக்குநா்( பொறுப்பு) கே. சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
இந்தப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் அழகா்கோவில் சாலையில் உள்ள மாலை நேரக் கல்லூரியில் பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அழகுக்கலை பயிற்சி வழங்கப்பட உள்ளது. 3 மாதங்கள் நடைபெறவுள்ள இந்த பயிற்சி வகுப்பில் தோ்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
இதில், சேர விரும்பும் பெண்கள் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவோ, தோ்ச்சிப் பெறாதவராகவோ இருக்கலாம். 20 நபா்கள் மட்டுமே பயிற்சி பெற முடியும். எனவே, விருப்பமுள்ள பெண்கள் மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைக்கழக மாலை நேரக் கல்லூரியில் செயல்படும் வயது வந்தோா் தொடா்கல்வி, விரிவாக்கப் பணித் துறை இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், கூடுதல் தகவல்களுக்கு 99943- 90196 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.