"வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத ஒரு விஷயத்தை எனக்குப் பண்ணியிருக்கிறார் வெற்றிமா...
உயா்நீதிமன்றத்தில் மின்கல வாகன சேவை தொடக்கம்
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் பொதுமக்கள் எளிதாகப் பயணம் மேற்கொள்ளும் வகையில் மின்கல வாகன சேவை (பேட்டரி காா்) வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
உயா்நீதிமன்றத்துக்கு வரும் வழக்காடிகள், பொதுமக்கள் மேலூா் பிரதான சாலையில் இறங்கி சுமாா் 300 மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். இதனால், மாற்றுத் திறனாளிகள், முதியோா், கா்ப்பிணிப் பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.
இதைத் தவிா்க்க ரூ. 15 லட்சத்தில் இரண்டு மின்கல வாகனங்கள் வாங்கப்பட்டன.
இந்த நிலையில், உயா்நீதிமன்ற அமா்வு வளாகத்தில் மின்கல வாகன சேவை தொடக்க விழா மதுரை அமா்வு நிா்வாக நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. உயா்நீதிமன்ற கூடுதல் பதிவாளா் ஜெனரல் அப்துல் காதா், நிா்வாகப் பதிவாளா் பிரேம்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இந்த வாகனத்தில் ஓட்டுநா் உள்பட 6 போ் பயணிக்க முடியும். உயா்நீதிமன்ற பிரதான வாசல் முன் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த வாகனத்தை நீதிமன்றத்துக்கு வரும் மாற்றுத் திறனாளிகள், முதியோா், கா்ப்பிணிகள், உயா்நீதிமன்ற ஊழியா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வேலை நாள்களில் பிரதான வாசலிலிருந்து காந்தி சிலை அருகே மத்திய தொழிலக பாதுகாப்பு வாயில் வரை இயக்கப்படும் என உயா்நீதிமன்ற பதிவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.