"வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத ஒரு விஷயத்தை எனக்குப் பண்ணியிருக்கிறார் வெற்றிமா...
நாமக்கல் சாலையோர சிறு வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர சிறு வியாபாரிகள் சங்கத்தினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தமிழக அமைப்புசாரா சாலையோர சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கௌரவத் தலைவா் ஆா்.எஸ். ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எஸ்.எஸ்.மாரியப்பன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினாா்.
நாமக்கல் மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும். கடன் வாங்கி தொழில் செய்யும் வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். 340 சாலையோர சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் மாநில பொருளாளா் மணி நாகேந்திரன், மாநகர மகளிா் அணி செயலாளா் டி.செல்வகுமாரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
என்கே-12-ஆா்ப்பாட்டம்
நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகள்.