``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு
குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நாமக்கல்லை அடுத்த கூலிப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட கூலிப்பட்டி கந்தசாமி கோயில் அடிவாரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட மக்கள் கல்வி நிறுவன இயக்குநா் சரவணன் வரவேற்றாா். சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் தலைமை வகித்து பெண்களுக்கு தொழிற்கல்வி சான்றிதழ்களை
வழங்கினாா்.
முன்னதாக மலைவாழ் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் சீனிவாசன் பேசினாா். நிகழ்ச்சியில் எருமப்பட்டி ஒன்றிய முன்னாள் தலைவா் லோகநாதன், நாமக்கல் தாட்கோ பொது மேலாளா் ராமசாமி, பொட்டிரெட்டிபட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் துளசிராமன், தொழிற்கல்வி பயிற்சி பெற்றோா் கலந்து கொண்டனா்.
என்கே-12-சைல்டு
குழந்தை தொழிலாளா் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன்.