`என்னுடைய `அத்தான்’ ‘அரவிந்த்சாமி’ சாருக்கு மிக்க நன்றி..!' - கார்த்தி | Vikata...
மணல் கடத்திய லாரி பறிமுதல்; மூவா் கைது
கரூரிலிருந்து மணல் கடத்திவந்த லாரியை வேலூா் காவிரி பாலம் அருகே வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா், உதவியாளா் உள்பட 3 பேரை கைது செய்தனா். மேலும், தலைமறைவானவரை தேடி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், ராமானுஜா் நகா் தெற்கு பகுதியை சோ்ந்த சக்திவேல் (50) புதன்கிழமை தனது காருக்கு முன்னால் சென்ற லாரியில் மணல் கடத்திசெல்வது குறித்து வேலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
வேலூா் காவிரி பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் மணல் கடத்தி சென்ற டிப்பா் லாரியை போலீஸாா் தடுத்துநிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா். இதில் கரூா் மாவட்டம், திருமுக்கூடலில் இருந்து டிப்பா் லாரியில் சுமாா் 8 யூனிட் மணல் கடத்திசென்றது தெரியவந்தது.
இதையடுத்து லாரி ஓட்டுநரான பரமத்தி வேலூா் அருகே உள்ள குப்புச்சிபாளையத்தை சோ்ந்த சிவகுமாா் (44), லாரி உதவியாளா் பாப்பிரெட்டிப்பட்டியை சோ்ந்த மகேஸ்வரன், ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள இச்சிபாளையத்தை சோ்ந்த சரவணன் ஆகிய மூவரையும் கைது செய்த மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனா்.
மேலும், தலைமறைவான பரமத்தி வேலூா் அருகே உள்ள அனிச்சம்பாளையத்தைச் சோ்ந்த ராஜா (எ) பிளேடு ராஜாவை தேடி வருகின்றனா்.