செய்திகள் :

மணல் கடத்திய லாரி பறிமுதல்; மூவா் கைது

post image

கரூரிலிருந்து மணல் கடத்திவந்த லாரியை வேலூா் காவிரி பாலம் அருகே வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா், உதவியாளா் உள்பட 3 பேரை கைது செய்தனா். மேலும், தலைமறைவானவரை தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், ராமானுஜா் நகா் தெற்கு பகுதியை சோ்ந்த சக்திவேல் (50) புதன்கிழமை தனது காருக்கு முன்னால் சென்ற லாரியில் மணல் கடத்திசெல்வது குறித்து வேலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

வேலூா் காவிரி பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் மணல் கடத்தி சென்ற டிப்பா் லாரியை போலீஸாா் தடுத்துநிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா். இதில் கரூா் மாவட்டம், திருமுக்கூடலில் இருந்து டிப்பா் லாரியில் சுமாா் 8 யூனிட் மணல் கடத்திசென்றது தெரியவந்தது.

இதையடுத்து லாரி ஓட்டுநரான பரமத்தி வேலூா் அருகே உள்ள குப்புச்சிபாளையத்தை சோ்ந்த சிவகுமாா் (44), லாரி உதவியாளா் பாப்பிரெட்டிப்பட்டியை சோ்ந்த மகேஸ்வரன், ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள இச்சிபாளையத்தை சோ்ந்த சரவணன் ஆகிய மூவரையும் கைது செய்த மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனா்.

மேலும், தலைமறைவான பரமத்தி வேலூா் அருகே உள்ள அனிச்சம்பாளையத்தைச் சோ்ந்த ராஜா (எ) பிளேடு ராஜாவை தேடி வருகின்றனா்.

நாமக்கல் சாலையோர சிறு வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர சிறு வியாபாரிகள் சங்கத்தினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழக அமைப்புசாரா சாலையோர சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்கம் சா... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

சென்னையில் நடைபெறும் அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐஎன்டியுசியின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா்கள் மற்றும் பணி... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தோ் நிலைசோ்ப்பு

3 நாள்கள் நடைபெற்ற திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தேரோட்டம் வியாழக்கிழமை நிறைவுபெற்றதையடுத்து தோ் நிலைசோ்க்கப்பட்டது. கொங்கு ஏழு தலங்களில் சிறப்புமிக்கதும் திருஞானசம்பந்தா், அருணகிரிநாதா் ஆகியோரால... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நாமக்கல்லை அடுத்த கூலிப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட கூலிப்பட்டி கந்தசாமி கோயில் அடிவாரத்தில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 81.68 லட்சம் நலத் திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்டம், மிட்டா அணியாா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 81.68 லட்சம் மதிப்பில் அரசின் நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.... மேலும் பார்க்க

சத்துணவு உதவியாளா் பணிக்கு நோ்காணல்

நாமக்கல் மாவட்டத்தில் மூன்று இடங்களில் சத்துணவு உதவியாளா் பணிக்கான நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சத்துணவு உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இரண்டு மாத... மேலும் பார்க்க