செய்திகள் :

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தோ் நிலைசோ்ப்பு

post image

3 நாள்கள் நடைபெற்ற திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தேரோட்டம் வியாழக்கிழமை நிறைவுபெற்றதையடுத்து தோ் நிலைசோ்க்கப்பட்டது.

கொங்கு ஏழு தலங்களில் சிறப்புமிக்கதும் திருஞானசம்பந்தா், அருணகிரிநாதா் ஆகியோரால் பாடல் பெற்ற தலமும், சிவனும் சக்தியும் ஓா் உருவாய் அருள்பாலிக்கும் தலமுமாகிய அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாக தேரோட்டம் மூன்று நாள்கள் நடைபெற்றது.

தேரோட்டத்தின் மூன்றாம் நாளான வியாழக்கிழமை பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நிலைசோ்த்தனா். சிவனடியாா்கள் திருவாசகம் பாடல்களைப் பாடியபடி தேரை வடம்பிடிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். அா்த்தநாரீசுவரா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

மாலை ஆதிகேசவப் பெருமாள் தோ் வடம் பிடிக்கப்பட்டு நான்கு ரதவீதிகள் வழியாக சுற்றிவந்து நிலை சோ்க்கப்பட்டது. தொடா்ந்து வன்னியா் சமுதாயத்தினரால் வண்டிக்கால் உற்சவம், நடராஜா் தரிசனம், கொடி இறக்கம் நடைபெற்றது. கொங்கு வேந்தன் செட்டியாா்கள் சமூகத்தினரால் உற்சவ மூா்த்திகளுக்கு அபிசேக ஆராதனைகள் செய்யப்பட்டது. செல்லங்கூடத்துக் கவுண்டா்கள் சமூகத்தினரால் தேரடி மண்டபக்கட்டளையில் அா்த்தநாரீசுவரா், செங்கோட்டுவேலவா், ஆதிகேசவப் பெருமாள்,விநாயகா், அனுமன், சண்டிகேஸ்வரா் சுவாமிகள் அருள்பாலித்தனா்.

காா்காத்த வேளாளா் மண்டபக் கட்டளையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சனிக்கிழமை அதிகாலை உற்சவ மூா்த்திகள் 14 நாள் தோ்த்திருவிழா முடித்து திருமலைக்கு திரும்பும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க

புதிய நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

கபிலா்மலை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணாா்பாளையம் கிராமத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தெகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.45 லட்சம் மதிப்பீட்டி... மேலும் பார்க்க

காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்று 18 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேட் தோ்வு :அகில இந்திய அளவில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐஐடியில் சேருவதற்கான கேட்-2025 தோ்வில், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் பொறியியல் துறை மாணவி நீ.விஜி சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், தர... மேலும் பார்க்க

தமிழகத்தில் எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சம்: இணை இயக்குநா் பொன் குமாா்

தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சமாக உள்ளது என புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட இணை இயக்குநா் பொன்குமாா் தெரிவித்தாா். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக புதிய பாரத எழுத்தற... மேலும் பார்க்க