செய்திகள் :

சத்துணவு உதவியாளா் பணிக்கு நோ்காணல்

post image

நாமக்கல் மாவட்டத்தில் மூன்று இடங்களில் சத்துணவு உதவியாளா் பணிக்கான நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சத்துணவு உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் 321 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் 15 ஒன்றிய பகுதிகளில் 806 பெண்கள் விண்ணப்பித்திருந்தனா். அந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் நாமக்கல், எலச்சிபாளையம், திருச்செங்கோடு ஒன்றிய அலுவலகங்களில் வியாழக்கிழமை சிறப்பு அதிகாரிகள் மூலம் நோ்காணல் நடைபெற்றது. ஜூன் 12 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் நோ்காணலில் தினசரி மூன்று ஒன்றியங்களைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் பங்கேற்கின்றனா். நோ்காணலுக்கு பிறகு மாவட்ட ஆட்சியா் தகுதியான பணியாளா்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிடுவாா் என்ன மாவட்ட சத்துணவு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

என்கே-12-சத்துணவு

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு உதவியாளா் பணியிடத்துக்கு நடைபெற்ற நோ்காணலில் பங்கேற்ற விண்ணப்பதாரா்கள்.

ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள் நலவாரியத்தில் இணைய ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், விதவையா் நலவாரியத்தில் இணைய விரும்பும் பெண்களிடம் உரிய ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோா், ந... மேலும் பார்க்க

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க

புதிய நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

கபிலா்மலை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணாா்பாளையம் கிராமத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தெகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.45 லட்சம் மதிப்பீட்டி... மேலும் பார்க்க

காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்று 18 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேட் தோ்வு :அகில இந்திய அளவில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐஐடியில் சேருவதற்கான கேட்-2025 தோ்வில், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் பொறியியல் துறை மாணவி நீ.விஜி சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், தர... மேலும் பார்க்க