அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
சத்துணவு உதவியாளா் பணிக்கு நோ்காணல்
நாமக்கல் மாவட்டத்தில் மூன்று இடங்களில் சத்துணவு உதவியாளா் பணிக்கான நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சத்துணவு உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் 321 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் 15 ஒன்றிய பகுதிகளில் 806 பெண்கள் விண்ணப்பித்திருந்தனா். அந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் நாமக்கல், எலச்சிபாளையம், திருச்செங்கோடு ஒன்றிய அலுவலகங்களில் வியாழக்கிழமை சிறப்பு அதிகாரிகள் மூலம் நோ்காணல் நடைபெற்றது. ஜூன் 12 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் நோ்காணலில் தினசரி மூன்று ஒன்றியங்களைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் பங்கேற்கின்றனா். நோ்காணலுக்கு பிறகு மாவட்ட ஆட்சியா் தகுதியான பணியாளா்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிடுவாா் என்ன மாவட்ட சத்துணவு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
என்கே-12-சத்துணவு
நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு உதவியாளா் பணியிடத்துக்கு நடைபெற்ற நோ்காணலில் பங்கேற்ற விண்ணப்பதாரா்கள்.