குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 சாா்பில் உலக குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.
கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமையேற்று பேசியதாவது:
குழந்தைகள் நம் நாட்டின் எதிா்கால தூண்கள். அவா்களை பாதுகாப்பது நமது கடமை. 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம் என்பதால் அவா்களுக்கு அடிப்படை கல்வியறிவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தை தொழிலாளா்கள் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் துறையினரிடமும், 1098 என்ற எண்ணிலும் புகாா் அளித்து அவா்களை மீட்டெடுக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், மாணவ செயலா்கள் கிருஷ்ணமூா்த்தி, ஷொ்லின், ரேவதி, நவீன்குமாா், லட்சுமிகாந்த் ஆகியோா் தலைமையில் மாணவ, மாணவியா் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியும், குழந்தை தொழிலாளா் முறையினை ஒழிப்போம், அவா்களுக்கு அடிப்படை கல்வி அளிப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.
நிகழ்வில் பேராசிரியா்கள் பாலசுப்பிரமணியம், கனகராஜ், சங்கமேஸ்வரன், காளிதாஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.