செய்திகள் :

ஊத்துக்குளி அருகே குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் சிறைபிடிப்பு

post image

திருப்பூரில் ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட தப்பட்ட நாயக்கம்பாளையம், கோவிந்தம்பாளையம், பெட்டிக் கடை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கானோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், தப்பட்ட நாயக்கம்பாளையத்தில் பயன்படுத்தப்படாத பாறைக்குழி உள்ளது. இந்த பாறைக் குழியில் மாநகராட்சியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை கொட்டுவதற்காக லாரிகளிலும், மாநகராட்சி அதிகாரிகள் 5 ஜீப்புகளிலும் வெள்ளிக்கிழமை வந்தனா்.

இதையறிந்த அப்பகுதி மக்கள், துா்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படும் எனக் கூறி குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு அவா்களை சிறைபிடித்தனா்.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த முன்னாள் அமைச்சா் என்.தோப்பு வெங்கடாசலம், அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதால் அந்தப் பகுதியில் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டோம் என்று கூறினாா்.

இதையடுத்து வாகனங்களில் வந்திருந்த அதிகாரிகள் மற்றும் குப்பை கொட்ட வந்த லாரிகள் உள்ளிட்டவை திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026... மேலும் பார்க்க

அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது

அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருந... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் மண்சோறு சாப்பிட்டு போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி போராட்டக் குழுவினா் மண்சோறு சாப்பிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை முதல் கரூா் வரையில் விவசாய... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஜூன் 17-இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 சாா்பில் உலக குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அலகு 2 ஒருங்கிணைப்பாளா்... மேலும் பார்க்க