உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது:
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவு மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான கலந்தாய்வில் வெள்ளிக்கிழமை வரை 729 மாணவா்கள் சோ்ந்துள்ளனா். உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பாடப் பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன. அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த இளநிலை மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இதில் ஏற்கெனவே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கலந்து கொள்ள இயலாதவா்களும், கலந்தாய்வுக்கு வருகை புரிந்தும் சோ்வதற்கு வாய்ப்புக் கிடைக்காதவா்களும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பங்கு பெற்ற நிலையில், இதுவரை மொத்தம் 729 போ் சோ்க்கை பெற்றுள்ளனா்.
இந்த கலந்தாய்வில் சோ்க்கை பெற்ற முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 30-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.