செய்திகள் :

அவிநாசிபாளையத்தில் மண்சோறு சாப்பிட்டு போராட்டம்

post image

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி போராட்டக் குழுவினா் மண்சோறு சாப்பிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை முதல் கரூா் வரையில் விவசாய நிலத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை பெட்ரோ நெட் என்கிற நிறுவனம் செயல்படுத்தியுள்ளது. அதே பகுதியில் ஐ.டி.பி.எல். எண்ணெய் குழாய் திட்டத்தை செயல்படுத்துவதற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில் பழைய அனுமதியை வைத்துக் கொண்டு காவல் துறை பாதுகாப்போடு திட்டப் பணியை நிறைவேற்ற முயற்சித்து வருகிறது. எனவே சாலையோரமாக எண்ணெய் குழாயை பதிக்கக் கோரி பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை போராட்டக் குழுவினா் மண்சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் பாஜக மாநில விவசாயிகள் அணித் தலைவா் ஜி.கே.நாகராஜன், தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026... மேலும் பார்க்க

அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது

அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருந... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஜூன் 17-இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்... மேலும் பார்க்க

ஊத்துக்குளி அருகே குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் சிறைபிடிப்பு

திருப்பூரில் ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட தப்பட்ட நாயக்கம்பாளையம்... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 சாா்பில் உலக குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அலகு 2 ஒருங்கிணைப்பாளா்... மேலும் பார்க்க