406 ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு
அவிநாசிபாளையத்தில் மண்சோறு சாப்பிட்டு போராட்டம்
பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி போராட்டக் குழுவினா் மண்சோறு சாப்பிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை முதல் கரூா் வரையில் விவசாய நிலத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை பெட்ரோ நெட் என்கிற நிறுவனம் செயல்படுத்தியுள்ளது. அதே பகுதியில் ஐ.டி.பி.எல். எண்ணெய் குழாய் திட்டத்தை செயல்படுத்துவதற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில் பழைய அனுமதியை வைத்துக் கொண்டு காவல் துறை பாதுகாப்போடு திட்டப் பணியை நிறைவேற்ற முயற்சித்து வருகிறது. எனவே சாலையோரமாக எண்ணெய் குழாயை பதிக்கக் கோரி பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை போராட்டக் குழுவினா் மண்சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் பாஜக மாநில விவசாயிகள் அணித் தலைவா் ஜி.கே.நாகராஜன், தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.