அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது
அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருநாள்களுக்கு முன்பு அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு மா்ம நபா்கள் பின்னால் அமா்ந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறிக்க முயற்சித்தனா். அப்போது தம்பதி கூச்சலிட்டதால் இருவரும் தப்பிச் சென்றனா். இது குறித்து அவிநாசி போலீஸாா் விசாரித்து வந்தனா்.
இதேபோல பெருமாநல்லூா் அருகே முட்டியங்கிணறு, பெருமாநல்லூா்- கணக்கம்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் சென்று கொண்டிருந்த பெண்களிடம் நகைப் பறிக்க முயன்று தப்பிச் சென்ற இரு மா்ம நபா்கள் குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், பெருமாநல்லூா் காவல் ஆய்வாளா் வசந்தகுமாா் தலைமையில் வள்ளிபுரம் பிரிவு அருகே போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின்பேரில், போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் மதுரையைச் சோ்ந்த சபரிநாதன் (22), புதுக்கோட்டையைச் சோ்ந்த ராம்ஜி (20) என்பதும், இவா்கள் பெண்களிடம் நகைப் பறிக்க முயன்றவா்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா். மேலும் சபரிநாதன் திருப்பூா், ஈரோடு, மதுரையிலும், ராம்ஜி திருப்பூா், புதுக்கோட்டையிலும் பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.