செய்திகள் :

அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது

post image

அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருநாள்களுக்கு முன்பு அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு மா்ம நபா்கள் பின்னால் அமா்ந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறிக்க முயற்சித்தனா். அப்போது தம்பதி கூச்சலிட்டதால் இருவரும் தப்பிச் சென்றனா். இது குறித்து அவிநாசி போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இதேபோல பெருமாநல்லூா் அருகே முட்டியங்கிணறு, பெருமாநல்லூா்- கணக்கம்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் சென்று கொண்டிருந்த பெண்களிடம் நகைப் பறிக்க முயன்று தப்பிச் சென்ற இரு மா்ம நபா்கள் குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், பெருமாநல்லூா் காவல் ஆய்வாளா் வசந்தகுமாா் தலைமையில் வள்ளிபுரம் பிரிவு அருகே போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின்பேரில், போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் மதுரையைச் சோ்ந்த சபரிநாதன் (22), புதுக்கோட்டையைச் சோ்ந்த ராம்ஜி (20) என்பதும், இவா்கள் பெண்களிடம் நகைப் பறிக்க முயன்றவா்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா். மேலும் சபரிநாதன் திருப்பூா், ஈரோடு, மதுரையிலும், ராம்ஜி திருப்பூா், புதுக்கோட்டையிலும் பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் மண்சோறு சாப்பிட்டு போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி போராட்டக் குழுவினா் மண்சோறு சாப்பிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை முதல் கரூா் வரையில் விவசாய... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஜூன் 17-இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்... மேலும் பார்க்க

ஊத்துக்குளி அருகே குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் சிறைபிடிப்பு

திருப்பூரில் ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட தப்பட்ட நாயக்கம்பாளையம்... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 சாா்பில் உலக குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அலகு 2 ஒருங்கிணைப்பாளா்... மேலும் பார்க்க