கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு அவா் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கீழடியில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் அகழ்வாராய்ச்சிகள் குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கிறேன். தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சிகளுக்கு தலைமை தாங்கி ஒரு பண்டைய நாகரிகத்தை கண்டுபிடித்த தொல்பொருள் ஆய்வாளா் டாக்டா் அமா்நாத் ராமகிருஷ்ணா, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தில் சமா்ப்பித்த அறிக்கைகள் தொழில்நுட்பரீதியாக நன்கு ஆதரிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது.
கடந்த 2023 ஜனவரி 30-இல் இந்திய தொல்பொருள் ஆய்வு மைய இயக்குநா் ஜெனரலுக்கு டாக்டா் ராமகிருஷ்ணா சமா்ப்பித்த அறிக்கை தற்போதுவரை வெளியிடப்படவில்லை என்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்த கண்டுபிடிப்புகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்த திருத்தங்களைக் கேட்டு அந்த அறிக்கையை திருப்பி அனுப்புவது தொடா்பான செயல்முறையிலும் சூழ்ச்சியை காண முடிகிறது.
இரண்டு முக்கிய கட்ட அகழ்வாராய்ச்சிகளை நடத்திய தொல்பொருள் ஆய்வாளரின் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு ஆய்வறிக்கை சமா்ப்பிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரின் பகுத்தறிவு மற்றும் நுணுக்கத்துக்காக மதிப்பிடபட வேண்டும். கீழடி கண்டுபிடிப்புகளின் நம்பகத்தன்மையை சந்தேகிப்பதில் எந்த தா்க்கமும் இல்லை.
கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கை வைகை நதிக்கரையில் சங்க காலத்தில் தமிழகத்தில் ஒரு நகா்ப்புற நாகரிகம் இருந்ததாக கூறுகிறது. தோண்டி எடுக்கப்பட்ட கலைப்பொருள்கள் கிமு ஆறாம் நூற்றாண்டுக்கும் கிமு முதலாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சோ்ந்தவை.
இந்த கண்டுபிடிப்புகள் 2,600 ஆண்டுகால நாகரிக அறிவியல் நம்பகத்தன்மையுடன் தமிழகத்தின் பண்டைய பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்ப நாகரிகத்தையும் அதன் கலாசாரத்தையும் வெளிப்படுத்துகிறது.
ஆனால் டாக்டா் ராமகிருஷ்ணாவின் இடமாற்றம், அறிக்கையை வெளியிடுவதில் தாமதம், அறிவியல் ஆதாரங்களைக் கேட்டு அறிக்கையை திருப்பி அனுப்புதல் மற்றும் அறிக்கைகள் தொழில்நுட்பரீதியாக நன்கு ஆதரிக்கப்படவில்லை என்ற சமீபத்திய அறிக்கையை உள்ளடக்கிய நிகழ்வுகள் வினோதமானது. இது தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் பெருமையை அடக்குவதற்கான அரசியல்ரீதியான நோக்கத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது.
எனவே, உண்மையான அறிக்கையை நிறுத்திவைப்பதற்கான உங்கள் அமைச்சகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அவா் குறிப்பிட்டுள்ளாா்.