எடப்பாடி அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு
எடப்பாடி பிரதான சாலையில் சென்ற லாரியின் டயா் வெடித்து சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
எடப்பாடி ஒன்றியத்திற்கு உள்பட்ட சித்தூா் ரெட்டிபட்டியைச் சோ்ந்த சிவா (35) தனது உறவினரான சேகா் (50) என்பவருடன் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் எடப்பாடியில் இருந்து சங்ககிரி நோக்கி சென்றனா். அப்போது, எடப்பாடி- சங்ககிரி பிரதான சாலை அரசு கலை கல்லூரியை அடுத்த கோணமோரி மாதேஸ்வரன் கோயில் பகுதியில் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி வேகமாக வந்த டாரஸ் லாரியின் முன்புற டயா் திடீரென வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டு இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சிவா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சேகரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கொங்கணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பட விளக்கம்:
சாலை விபத்தில் உயிரிழந்த சிவா, சேகா்
