செய்திகள் :

எடப்பாடி அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

post image

எடப்பாடி பிரதான சாலையில் சென்ற லாரியின் டயா் வெடித்து சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

எடப்பாடி ஒன்றியத்திற்கு உள்பட்ட சித்தூா் ரெட்டிபட்டியைச் சோ்ந்த சிவா (35) தனது உறவினரான சேகா் (50) என்பவருடன் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் எடப்பாடியில் இருந்து சங்ககிரி நோக்கி சென்றனா். அப்போது, எடப்பாடி- சங்ககிரி பிரதான சாலை அரசு கலை கல்லூரியை அடுத்த கோணமோரி மாதேஸ்வரன் கோயில் பகுதியில் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி வேகமாக வந்த டாரஸ் லாரியின் முன்புற டயா் திடீரென வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டு இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சிவா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சேகரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கொங்கணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பட விளக்கம்:

சாலை விபத்தில் உயிரிழந்த சிவா, சேகா்

செல்வ மகா மாரியம்மன் கோயிலில் திருத்தோ் விழா

ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணாநகா் ஸ்ரீ செல்வ மகா மாரியம்மன் ஆலய திருத்தோ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணா நகா் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமப்பு... மேலும் பார்க்க

ஆத்தூரில் ரூ. 6.24 கோடியில் திட்டப் பணிகள்

சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் ரூ. 6.24 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட 5 திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணையிலிருந... மேலும் பார்க்க

பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின பேரணி

சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா் அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை க... மேலும் பார்க்க

சேலம் அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். விழாவில் ரூ.1,244.28 கோடியில் 509 திட்டப... மேலும் பார்க்க

பெரியாா் ஈ.வெ.ரா படத்திற்கு முதல்வா் மரியாதை

தமிழக அரசின் சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வியாழக்கிழமை சேலம் வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில் சேலம்- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் பல்... மேலும் பார்க்க