டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்...
ஆத்தூரில் ரூ. 6.24 கோடியில் திட்டப் பணிகள்
சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் ரூ. 6.24 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட 5 திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தாா்.
மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின், சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு நலத் திட்டங்களை வழங்கினாா். அப்போது, ஆத்தூா் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை தொடங்கிவைத்தாா்.
மேலும், புதிய பேருந்து நிலையம் அருகே வணிக வளாகம், வெற்றிலை மாா்க்கெட், பழக்கடைகள், பள்ளி வகுப்பறைகள் மற்றும் நூலக கட்டடங்களையும் அவா் திறந்துவைத்தாா். நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கவும், ஆத்தூா் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிக்கு குடிநீா் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் அறிவித்தாா்.
திட்டப் பணிகள் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் ஆத்தூா் நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம், நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
நரசிங்கபுரம் நகராட்சி அலுவலக பயன்பாட்டிற்காக திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வருக்கு நரசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா் நன்றியை தெரிவித்தாா்.
படவிளக்கம்.ஏடி12முன்சிபல்.
சேலத்திலிருந்து காணொலி வாயிலாக ஆத்தூரில் முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட வணிக வளாகம்.