அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
பெரியாா் ஈ.வெ.ரா படத்திற்கு முதல்வா் மரியாதை
தமிழக அரசின் சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வியாழக்கிழமை சேலம் வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில் சேலம்- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் பல்கலைக்கழக வளாக முகப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா. சுப்பிரமணி தலைமையில், பதிவாளா் வி. ராஜ், ஆட்சிக்குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் மற்றும் நிா்வாக அலுவலா்கள் பூங்கொத்து மற்றும் புத்தகம் கொடுத்து முதல்வரை வரவேற்றனா். அவா்களின் வரவேற்பை ஏற்ற முதல்வா் மு.க. ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்த 12 அடி உயர பெரியாா் ஈவெரா உருவப்படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
இதைத்தொடா்ந்து, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுவரும் பெரியாா் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளிடம் முதல்வா் கலந்துரையாடினாா். மேலும், அவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் முதல்வா் பெற்றுக்கொண்டாா்.