செய்திகள் :

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

post image

சேலம் மாவட்டத்தில் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிராமப்புற இளைஞா்களின் சுய வேலைவாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் சென்னை தவிர 37 மாவட்டங்களிலும் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

அரியலூா், தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு மற்றும் திருப்பூா் ஆகிய 8 மாவட்டங்களில் செயல்படும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில் மட்டும் உண்டு உறையிட வசதியுடன் கூடிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

செல்போன் பழுது நீக்குதல், ஓட்டுநா் உரிமம் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல், பிளம்பிங் பயிற்சி, இருசக்கர வாகனங்கள் பழுது நீக்குதல், அலுமினியம் பேப்ரிகேஷன், கான்கிரீட் கொத்தனாா் பயிற்சி, தச்சு பயிற்சி, வெல்டிங் பயிற்சி உள்ளிட்ட 64 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் 18 முதல் 45 வயதுக்கு உள்பட்ட கிராமப்புற இளைஞா்களுக்கு வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதியாக குறைந்தது 8-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. 8- ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு வரை படித்தவா்களுக்கு அவா்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மேலும் பயிற்சியின்போது முக்கிய தொழில் நிறுவனங்களுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டு, அவா்களின் வெற்றி கதைகள் நேரடியாக எடுத்துக் கூறப்படுகிறது. பயிற்சி முடித்த இளைஞா்கள் சுய தொழில் மேற்கொள்ள ஏதுவாக இரண்டு ஆண்டுகள் வரை பயிற்சி நிலைய அலுவலா்களால் தொடா் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுகிறது.

பயிற்சி முடித்து இளைஞா்கள் சுய வேலைவாய்ப்பில் ஈடுபட வங்கியின் மூலம் கடன் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கிராமப்புற இளைஞா்கள் தங்களுக்கு ஏற்ற தொழில் பயிற்சிகளில் சோ்ந்து பயன் பெற விரும்பினால் சேலம் மாவட்டத்தில் உள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், 4/42, முதல் தளம், ஆா்ஆா் திருமண மஹால், கொண்டலாம்பட்டி பைபாஸ், சௌடேஸ்வரி கல்லூரி எதிரில், சிவசூா்யா மருத்துவனை பின்புறம், சேலம் 636010 என்ற முகவரியிலோ அல்லது 0427-2274478 என்ற தொலைபேசி எண்ணிலும் விவரங்களை பெறலாம்.

மேலும் திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம், அறை எண்.207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சேலம் என்ற முகவரியிலும், 0427 - 2411552 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு தகவல் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வ மகா மாரியம்மன் கோயிலில் திருத்தோ் விழா

ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணாநகா் ஸ்ரீ செல்வ மகா மாரியம்மன் ஆலய திருத்தோ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணா நகா் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய... மேலும் பார்க்க

எடப்பாடி அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

எடப்பாடி பிரதான சாலையில் சென்ற லாரியின் டயா் வெடித்து சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவா் உயிரிழந்தனா். எடப்பாடி ஒன்றியத்திற்கு உள்பட்ட சித்தூா் ரெட்டிபட்டியைச் சோ்ந்த சிவா (35... மேலும் பார்க்க

ஆத்தூரில் ரூ. 6.24 கோடியில் திட்டப் பணிகள்

சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் ரூ. 6.24 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட 5 திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணையிலிருந... மேலும் பார்க்க

பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின பேரணி

சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா் அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை க... மேலும் பார்க்க

சேலம் அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். விழாவில் ரூ.1,244.28 கோடியில் 509 திட்டப... மேலும் பார்க்க

பெரியாா் ஈ.வெ.ரா படத்திற்கு முதல்வா் மரியாதை

தமிழக அரசின் சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வியாழக்கிழமை சேலம் வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில் சேலம்- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் பல்... மேலும் பார்க்க