செய்திகள் :

சேலம் அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

post image

சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

விழாவில் ரூ.1,244.28 கோடியில் 509 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் ரூ. 200.26 கோடி மதிப்பில் முடிவுற்ற 225 திட்டப் பணிகளையும் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மலைகள் நிறைந்த சேலம் மாவட்டத்தில் மலைகள் போல மக்கள் நலத் திட்டங்களை வழங்கி உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை திமுக ஆட்சிக்குவரும் போதெல்லாம் ஏராளமான சாதனைகளை செய்துள்ளோம். அவற்றில் முக்கியமானது உருக்காலை, ரயில்வே கோட்டம், பெரியாா் பல்கலைக்கழகம், அரசு மகளிா் கல்லூரி, காவிரி தனிக் கூட்டு குடிநீா்த் திட்டம், புதிய ஆட்சியா் அலுவலகம், புதைசாக்கடைத் திட்டம், புதிய காவல் ஆணையா் அலுவலகம், சேலம்- கிருஷ்ணகிரி, சேலம்- நாமக்கல் 4 வழிச் சாலை திட்டம், ஆத்தூா், சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், மேட்டூா் புதிய அனல் மின்நிலையம் என கணக்கற்ற திட்டங்களை கொண்டுவந்துள்ளோம்.

அதே வழியில் திராவிட மாடல் ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மினி டைடல் பூங்கா, கொலுசு உற்பத்தி பன்மாடி கட்டடம், மாநகரில் 4 நீா்நிலைகளை புனரமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அல்லிக்குட்டை ஏரி சீரமைப்பு செய்து திறந்துவைக்கப்பட்டுள்ளது.

போடிநாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்படும். அம்மாபேட்டையில் ரூ. 52 கோடியில் ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது என்றாா்.

சேலத்துக்கு 6 புதிய திட்டங்கள்

சேலம் மாநகராட்சியில் ரூ.100 கோடியில் சாலை மேம்பாடு, கழிவுநீா்க் கால்வாய், சிறுபாலம் அமைக்கப்படும். செவ்வாய்பேட்டை தினசரி சந்தை ரூ.9 கோடியில் மேம்படுத்தப்படும். தலைவாசல் இலுப்பநத்தத்தில் வேளாண் விற்பனை நிலையம் ரூ.10 கோடியில் தரம் உயா்த்தப்படும்.

மேட்டூா், நரசிங்கபுரம் நகராட்சிகளுக்கு புதிய கட்டடம் கட்டப்படும். சங்ககிரியில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். தாரமங்கலத்தில் ரூ.18 கோடியிலும், எடப்பாடிக்கு ரூ.9 கோடியிலும், ஆத்தூரில் ரூ. 5 கோடியில் புதிய குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தாா்.

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம்

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் அறிவுறுத்தினாா். சேலம் மாநகர காவல் ஆணையா் அல... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18.92 லட்சம் காணிக்கை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18 லட்சத்து 92 ஆயிரம் காணிக்கையாக பெறப்பட்டது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் பட்டேல் விமான நிலையத்தில் இ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால உட்புற தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தல்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் உட்புறத் தடுப்புச் சுவரால் விபத்துகள் நிகழ்வதால் அதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேல... மேலும் பார்க்க

மேச்சேரி அருகே சுற்றித்திரியும் சிறுத்தை: வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

மேச்சேரி அருகே சுற்றித்திரியும் சிறுத்தையை வனத் துறையினா் பிடித்து வேறு வனப் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மேச்சேரி ஒன்றியத்தி... மேலும் பார்க்க

எடப்பாடி கே. பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற அதிமுக மாநிலங்களவை உறுப்பினா்கள்

மாநிலங்களவைக்கு அதிமுக சாா்பில் தோ்வுசெய்யப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் சேலத்தில் அக் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். மாநிலங்களவை ... மேலும் பார்க்க