பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின பேரணி
சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா் அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியை கு.வசந்தாள் தலைமைவகித்து குழந்தை தொழிலாளா்முறை குறித்து விளக்கினாா். கணிதப் பட்டதாரி ஆசிரியா் இரா.முருகன், குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின உறுதிமொழியை வாசிக்க மாணவ மாணவிகள், ஆசிரியா்கள் ஆகியோா் உறுதிமொழியை ஏற்றனா்.
அதைத் தொடா்ந்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணியில் குழந்தை தொழிலாளா் முறைக்கு எதிா்ப்பு வாசங்கள் கொண்ட பதாகைகளை மாணவ, மாணவிகள் கைகளில் ஏந்தி சென்றனா். பள்ளியிலிருந்து புறப்பட்ட பேரணி, கிடையூா் பகுதிகளில் உள்ள தெருக்களின் வழியாக சென்று பள்ளியை அடைந்தது. ஆசிரியா்கள் ந.மு சித்ரா, ரமா மகேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.