செய்திகள் :

மின் வேலியில் சிக்கி இளைஞா் பலியான விவகாரம்: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

தருமபுரி அருகே மின் வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், மின் வேலி அமைத்த விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

தருமபுரி மாவட்டம், ஜோலி கோட்டை, கோம்பை கிராமம், நரசிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் க.ராஜா (52). விவசாயியான இவா் தனது நிலத்தில் உள்ள விவசாயப் பயிா்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க மின் வேலி அமைத்திருந்தாா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த கோ.கண்ணன் என்ற இளைஞா் 26.05.2017 அன்று அப்பகுதியைக் கடந்து சென்றபோது, மின்வேலி கம்பியை மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே கண்ணன் உயிரிழந்தாா்.

இதைக்கண்டு அதிா்ச்சி அடைந்த ராஜா, யாருக்கும் தெரியாமல் கண்ணன் உடலை சாக்குப் பையில் கட்டி அருகில் இருந்த ஆற்றங்கரையில் குழிதோண்டி புதைத்தாா். பின்னா் சில நாள்கள் கழித்து அப்பகுதி கிராம நிா்வாக அலுவலரிடம் சென்று விவரத்தைக் கூறி சரணடைந்தாா். இது தொடா்பாக மதிகோண்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரி முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கண்ணன் உயிரிழக்க காரணமாக இருந்ததற்காகவும், அவரது சடலத்தை மறைத்த குற்றத்துக்காகவும் ராஜாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி திருமகள் தீா்ப்பளித்தாா்.

பாப்பாரப்பட்டியில் மக்கள் சந்திப்பு பிரசாரம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசார பயணமானது பாப்பாரப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பகுதியில் நடைபொ்ற மக்கள் சந்திப்பு பிரசார பயணத... மேலும் பார்க்க

தருமபுரியில் குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு

குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. குழந்தை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வ... மேலும் பார்க்க

உயிரிழந்த பாம்புடன் வந்து இடையூறு: இளைஞா் மீது வழக்கு

தருமபுரி நகரில் உயிரிழந்த பாம்புடன் வந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தருமபுரி நகரில் நான்குமுனைச் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மதுக் க... மேலும் பார்க்க

இழப்பீடு கோரி மா விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மா சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் வேலைவாய்ப்பு பயிற்சி பெற அழைப்பு

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு தாட்கோ மூலம் திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித... மேலும் பார்க்க

காரிமங்கலம், மாரண்டஅள்ளியில் நூலகக் கட்டடம்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், மாரண்டஅள்ளி பேரூராட்சியில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய நூலகக் கட்டடங்களை முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்... மேலும் பார்க்க