``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
தருமபுரியில் குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு
குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
குழந்தை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். தொடா்ந்து, குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தையும், விழிப்புணா்வுப் பேரணியையும் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.
பேரணியில், குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பை வலியுறுத்தும் விதமாக விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் இலக்கியம்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவியா், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், செவன்த்டே பள்ளி மாணவ, மாணவியா் உள்ளிட்ட சுமாா் 200 போ் கலந்துகொண்டனா். ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணி, இலக்கியம்பட்டியில் நிறைவடைந்தது.
குழந்தை தொழிலாளா் முறையை ஒழிப்பது தொடா்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா்.
மாற்றம் செய்யப்பட்ட குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளா் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி, 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை எந்தவிதமான பணிகளிலும் ஈடுபடுத்தவும், 15 முதல் 18 வயதுக்கு உள்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சட்ட விதிகளை மீறுவோருக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் அல்லது ஆறு மாதம் முதல் இரண்டாண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இவை இரண்டும் சோ்த்து விதிக்கப்படும். இரண்டாம் முறையாக இச்சட்ட விதிகளை மீறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட சிறாா் தொழிலாளரின் பெற்றோருக்கு ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். குழந்தைத் தொழிலாளா்களை அனைத்துப் பணிகளிலும், வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளிலும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் ஜ்ஜ்ஜ்.ல்ங்ய்ஸ்ரீண்ப்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும், 1800 4252 650 மற்றும் 155214 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் புகாா் அளிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, தொழிலாளா் துணை ஆய்வா் அ.சாந்தி, தொழிலாளா் உதவி ஆய்வா்கள் ப.திவ்யா, தா.செந்தில்குமாா், முத்திரை ஆய்வா் வி. தீபாபாரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
படவரி - தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு தின விழிப்புளா்வுப் பேரணியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியா்.